Posted by: MSB Posted date: 09:53 / comment : 0
அறிவியல் >> சனியின் நிலாவில் ஐஸ்: நாசா கண்டுபிடிப்புசனியின் நிலாவில் ஐஸ்: நாசா கண்டுபிடிப்புபதிவு செய்த நாள் 2/14/2011 2:16:00 PM
நாசா: சனி கிரகத்தின் சந்திரனான டைட்டனில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகின்றன. அங்கு தண்ணீர் ஐஸ்கட்டியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்த பெரிய கோள் சனி. எடையில் பூமி போல 95 மடங்கும் அளவில் பூமி போல 760 மடங்கும் பெரியது. நமக்கு ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணு என ஒரே ஒரு சந்திரன்தான். மெகா சைஸ் சனி கிரகத்துக்கு 62 சந்திரன்கள். சனி கிரகத்தின் தன்மை பற்றியும் அதன் துணைக் கோள்கள் (சந்திரன்) பற்றியும் ஆராய்ச்சி செய்வதற்காக ‘காசினி ஹைகன்ஸ்’ விண்கலத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (நாசா) கடந்த 1997ம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பியது. 7 ஆண்டு பயணத்துக்கு பிறகு சனி ஏரியாவை இது 2004ல் சென்றடைந்தது. பின்னர் அதில் இருந்து தனியே பிரிந்த ஹைகன்ஸ் விண்கலம், சனியின் மிகப்பெரிய நிலாவான டைட்டனில் 2005ல் தரையிறங்கியது. காசினியும் ஹைகன்சும் தங்கள் ஆராய்ச்சி வேலையை சிறப்பாக செய்து வருவதால் அவற்றின் ‘பதவிக்காலம்’ தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சிக்கு ‘காசினி ஈக்வினாக்ஸ் மிஷன்’ என்று பெயர் மட்டும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இரு விண்கலமும் 2017 வரை மக்கர் பண்ணாமல் இயங்கும் என்று அறிவித்திருக்கிறது நாசா. இந்நிலையில், டைட்டனை சுற்றி வெண் மேகக் கூட்டங்கள் இருப்பது காசினி விண்கலத்தின் அகச்சிவப்பு ஸ்பெக்ரோமீட்டர் மூலம் தற்போது தெரியவந்துள்ளது. இதுபற்றி நாசா விஞ்ஞானி ராபர்ட் சாமுவேல்சன் கூறியதாவது: டைட்டனின் வளிமண்டலத்தில் மீத்தேன், ஈத்தேன் வாயுக்கள் அதிகம் இருக்கின்றன. அவைதான் வெண் மேகங்களை உருவாக்குவதாக ஏற்கனவே தெரியவந்தது. இவை அச்சு அசலாக பூமிக்கு மேல் நீராவியால் உருவாகும் மேகங்கள் போலவே இருக்கின்றன. அந்த மேகம் ஆவியானதும் அதில் இருந்து ஹைட்ரோகார்பன்களும் இதர ஆர்கானிக் தனிமங்களும் தூசி போல தொடர்ச்சியாக டைட்டனில் படிகின்றன என்றும் தெரிகிறது. இவ்வாறு வளிமண்டலத்தில் இருக்கும் மேகம் மற்றும் திவலைகளின் அளவு பற்றி தெரிந்தால் அவை எதனால் ஆக்கப்பட்டது? டைட்டனில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா என்று கண்டுபிடித்துவிடலாம். ஒருவேளை, தண்ணீர் இருக்கும் பட்சத்தில், டைட்டனில் அது ஐஸ் பாறையாகத்தான் இருக்கும். இவ்வாறு ராபர்ட் கூறியுள்ளார். | ||||
About MSB
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
விடலைப் பருவம் விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வள...
-
உடலமைப்பு, முக அழகி...
-
நீங்களே ஜோதிடம் பார்பதற்கான சிறந்த மென்பொருள் இதோ உங்களுக்காக... தமிழ் ஜோதிட மென்பொருள் இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்துங்கள். உ...
-
தமிழ்நாட்டிலுள்ள இடைநிலை ஆசிரியருக்கான பயிற்சிப் பள்ளிகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் ...
-
இந்தியாவின் தட்பவெப்ப நிலை இந்தியா ஒரு பரந்த துணைக் கண்டமாக இருப்பதனால் இந்தியாவின் தட்பவெப்ப நிலை ( Climate of India ) (இந்தியாவின் தட்ப...
-
பாலியற் கல்வி எனப்படுவது பால் தன்மை , இனப்பெருக்கம் , பாலுறவு , கருத்தடைச் சாதனங்கள் மற்றும் ஏனைய மனித பாலியல் நடத்தைகள் பற்றியதான கல்வியாகு...
-
பொன்னியின் செல்வன் , கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது...
-
புவியியல் ஆள்கூற்று முறை அகலாங்கு மற்றும் நெட்டாங்குகளை காட்டும் புவியின் வரைப்படம் புவியியல் ஆள்கூற்று முறை ( Geographic coordinate...
-
மைக்ரோசாப்ட் மாணவர்களுக்கு வழங்கும் இலவச மென்பொருட்கள் கணினி உலகின் முன்னோடி நிறுவனமான மைக்ரோசாப்ட் மாணவர்களுக்கு இலவச அதன் மென்பொருட்களை வ...
-
உயிரித் தொழில்நுட்பத்தின் வரலாறு கி.பி.1ஆம் நூற்றாண்டு வரை கி. மு. 8,000 - மனிதர்கள் பயிர் விளைவிக்கவும் வீட்டு விலங்குகளை வளர்க்கவும் பழக...
Comments
Labels
கல்வி
கல்வி தகவல்கள்
மருத்துவம்
அரசியல்
ஆரோக்கியம்
உடல் நலம்
விண்வெளி ஆராய்ச்சி
வேலைவாய்ப்பு
கணினி தகவல்கள்
அறிவியல்
மொபைல்
உளவியல்
சட்டம்
பொது அறிவு
இயற்கை
இலவச மென்பொருட்கள்
உயிரித் தொழில்நுட்பம்
செய்திகள்
ஜோதிடம்
தகவல்கள்
புள்ளியியல்
வரலாறு
ஆராய்ச்சி
உயிரியல்
கதைகள்
காலநிலை
குரூப்-2 தேர்வு
புவியியல்
மின்னூல்
இலவச மடிக்கணினி
கணிதம்
சமுதாயம்
சூரியக் குடும்பம்
டி.என்.பி.எஸ்.சி
திருமணம்
தேர்தல் முடிவுகள்
தொழில்நுட்பம்
புகையிலை
பொதுத் தேர்வு
மக்கள் தொகை
விருது
No comments: