அறிவியல்
Posted by: MSB Posted date: 09:27 / comment : 0
பூமிக்கு அருகில் சந்திரன் வருவதால் பூகம்பம் ஏற்படுமா?சென்னை: நாளை பூமிக்கு அருகில் சந்திரன் வருவதால், பூகம்பமோ, சுனாமியோ ஏற்படும் என பீதியடையத் தேவையில்லை என விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். முழு நிலவை காட்டும் பவுர்ணமி ஒவ்வொரு மாதமும் வரும். ஆனால் நாளை வருவது மெகா பவுர்ணமி. ஆம், பூமிக்கு அருகில் சந்திரன் வருவதால் வழக்கத்தைவிட சற்று பெரியதாக இருக்கும் என்கிறார்கள் விஞஞானிகள். 'சூப்பர்மூன்' என்ற இந்த அதிசயம், 20 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழப் போகிறது. இதற்கு முன்பு 1955, 1974, 1992 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் பூமிக்கு அருகில் சந்திரன் வந்துள்ளது. "வானில் அதிசயங்கள் நிகழும்போது, பூகம்பம், எரிமலை வெடிப்பு உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது" என கடந்த வாரம் செய்தி வெளியானது. இதை மெய்யாக்கும் வகையில், 12ம் தேதி ஜப்பானில் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டு பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மேலும் பல நாட்டு மக்கள் பீதியடைந்துள்ளனர். ஆனால், பூகம்பம், எரிமலை வெடிப்பு உட்பட பூமியில் நிகழும் மாற்றங்களுக்கு சந்திரன் எந்த வகையிலும் காரணமாக அமையாது என்றும் இதுபற்றி பயப்படத் தேவையில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கடல் சீற்றம் இருக்கும் சந்திரன் பூமியை நெருங்கி வருவதால், பூகம்பம், சுனாமி உள்ளிட்ட பேரழிவுகள் ஏற்படுமா என தினமும் பலர் தொலைபேசி மூலம் கேட்பதாக தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். "பூகம்பமோ, சுனாமியோ ஏற்படுவதற்கு சூப்பர் மூன் எந்த வகையிலும் காரணமாக அமையாது என உறுதியாக கூறுகிறோம். எனவே, வழக்கம்போல இந்த பவுர்ணமியை சந்தோஷமாக பார்த்து ரசிக்கலாம். வழக்கத்தைவிட சந்திரன் சற்று பெரியதாக இருக்கும். எனினும், வழக்கமாக சந்திரன் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதை அறிந்திராத சாமானிய மக்கள் இந்த வித்தியாசத்தை உணர முடியாது" என இந்த மையத்தின் செயல் இயக்குநர் ஐயம்பெருமாள் தெரிவித்தார். "சூப்பர்மூன் காரணமாக, வெப்பநிலையில் எவ்வித மாறுதலும் ஏற்படாது. கடல் அலைகள் மற்றும் வழக்கத்துக்கு மாறாக சற்று சீற்றத்துடன் இருக்கும்" என சென்னை வானிலை மைய துணை இயக்குநர் ராஜ் தெரிவித்துள்ளார். |
About MSB
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
விடலைப் பருவம் விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வள...
-
உடலமைப்பு, முக அழகி...
-
நீங்களே ஜோதிடம் பார்பதற்கான சிறந்த மென்பொருள் இதோ உங்களுக்காக... தமிழ் ஜோதிட மென்பொருள் இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்துங்கள். உ...
-
தமிழ்நாட்டிலுள்ள இடைநிலை ஆசிரியருக்கான பயிற்சிப் பள்ளிகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் ...
-
இந்தியாவின் தட்பவெப்ப நிலை இந்தியா ஒரு பரந்த துணைக் கண்டமாக இருப்பதனால் இந்தியாவின் தட்பவெப்ப நிலை ( Climate of India ) (இந்தியாவின் தட்ப...
-
பாலியற் கல்வி எனப்படுவது பால் தன்மை , இனப்பெருக்கம் , பாலுறவு , கருத்தடைச் சாதனங்கள் மற்றும் ஏனைய மனித பாலியல் நடத்தைகள் பற்றியதான கல்வியாகு...
-
பொன்னியின் செல்வன் , கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது...
-
புவியியல் ஆள்கூற்று முறை அகலாங்கு மற்றும் நெட்டாங்குகளை காட்டும் புவியின் வரைப்படம் புவியியல் ஆள்கூற்று முறை ( Geographic coordinate...
-
மைக்ரோசாப்ட் மாணவர்களுக்கு வழங்கும் இலவச மென்பொருட்கள் கணினி உலகின் முன்னோடி நிறுவனமான மைக்ரோசாப்ட் மாணவர்களுக்கு இலவச அதன் மென்பொருட்களை வ...
-
உயிரித் தொழில்நுட்பத்தின் வரலாறு கி.பி.1ஆம் நூற்றாண்டு வரை கி. மு. 8,000 - மனிதர்கள் பயிர் விளைவிக்கவும் வீட்டு விலங்குகளை வளர்க்கவும் பழக...
Comments
Labels
கல்வி
கல்வி தகவல்கள்
மருத்துவம்
அரசியல்
ஆரோக்கியம்
உடல் நலம்
விண்வெளி ஆராய்ச்சி
வேலைவாய்ப்பு
கணினி தகவல்கள்
அறிவியல்
மொபைல்
உளவியல்
சட்டம்
பொது அறிவு
இயற்கை
இலவச மென்பொருட்கள்
உயிரித் தொழில்நுட்பம்
செய்திகள்
ஜோதிடம்
தகவல்கள்
புள்ளியியல்
வரலாறு
ஆராய்ச்சி
உயிரியல்
கதைகள்
காலநிலை
குரூப்-2 தேர்வு
புவியியல்
மின்னூல்
இலவச மடிக்கணினி
கணிதம்
சமுதாயம்
சூரியக் குடும்பம்
டி.என்.பி.எஸ்.சி
திருமணம்
தேர்தல் முடிவுகள்
தொழில்நுட்பம்
புகையிலை
பொதுத் தேர்வு
மக்கள் தொகை
விருது

No comments: