Posted by: MSB Posted date: 12:46 / comment : 0
தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம்: அடுத்த வாரம் கமிட்டி அறிக்கை
மேல் முறையீடு செய்துள்ள தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதற்கான அறிக்கையை அடுத்த வாரம் நீதிபதி ரவிராஜ பாண்டியன் அரசிடம் வழங்குகிறார். தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதை ஒழுங்குபடுத்தும் வகையில் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் தமிழக அரசு கமிட்டியை அமைத்தது.
இந்த கமிட்டி 10,400 தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்தது. நீதிபதி கோவிந்த ராஜன் நிர்ணயித்த கட்டணம் போதாது. அதைக்கொண்டு பள்ளியை நடத்த இயலாது. அதனால் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்தன. அதன் அடிப்படையில் 6,400 பள்ளிகள் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மேல் முறையீடும் செய்தன.
இதைத் தொடர்ந்து கட்டிடம், ஆய்வகம் வசதி, ஆசிரியர் சம்பளம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் அந்த பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்க ஐகோர்ட்டு காலக்கெடு விதித்தது. இதற்கிடையில் நீதிபதி கோவிந்தராஜன் உடல்நிலை காரணமாக பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ரவிராஜபாண்டியன், கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். மேல் முறையீடு செய்த பள்ளி முதல்வர், நிர்வாகிகளை மாவட்டம் வாரியாக அழைத்து விசாரணை நடத்தினார்.
கூடுதலான ஆவணங்களை பெற்று அவர் ஆய்வு செய்தார். கடந்த 6 மாதமாக தனியார் பள்ளிகளிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இதுவரை 6000 பள்ளிகளிடம் ஆய்வு முடித்துள்ளது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 400 பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தவேண்டும். வருகிற 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
இதையடுத்து புதிய கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அடுத்த வாரத்திற்குள் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிட்டி முடிவு செய்துள்ளது. மே மாதம் இறுதியில் புதிய கல்வி கட்டணம் நடைமுறைப்படுத்துவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபை தேர்தல் முடிவு மே 13-ந்தேதி வெளியிடப்படுவதால் அதன் பிறகு அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. தேர்தல் முடிவுக்கு முன்போ அல்லது பின்னரோ புதிய கல்வி கட்டணத்தை நடைமுறைப்படுத்துவதில் எந்த சிக்கலும் ஏற்படாது.
About MSB
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
விடலைப் பருவம் விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வள...
-
உடலமைப்பு, முக அழகி...
-
நீங்களே ஜோதிடம் பார்பதற்கான சிறந்த மென்பொருள் இதோ உங்களுக்காக... தமிழ் ஜோதிட மென்பொருள் இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்துங்கள். உ...
-
இந்தியாவின் தட்பவெப்ப நிலை இந்தியா ஒரு பரந்த துணைக் கண்டமாக இருப்பதனால் இந்தியாவின் தட்பவெப்ப நிலை ( Climate of India ) (இந்தியாவின் தட்ப...
-
தமிழ்நாட்டிலுள்ள இடைநிலை ஆசிரியருக்கான பயிற்சிப் பள்ளிகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் ...
-
பாலியற் கல்வி எனப்படுவது பால் தன்மை , இனப்பெருக்கம் , பாலுறவு , கருத்தடைச் சாதனங்கள் மற்றும் ஏனைய மனித பாலியல் நடத்தைகள் பற்றியதான கல்வியாகு...
-
பொன்னியின் செல்வன் , கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது...
-
புவியியல் ஆள்கூற்று முறை அகலாங்கு மற்றும் நெட்டாங்குகளை காட்டும் புவியின் வரைப்படம் புவியியல் ஆள்கூற்று முறை ( Geographic coordinate...
-
மைக்ரோசாப்ட் மாணவர்களுக்கு வழங்கும் இலவச மென்பொருட்கள் கணினி உலகின் முன்னோடி நிறுவனமான மைக்ரோசாப்ட் மாணவர்களுக்கு இலவச அதன் மென்பொருட்களை வ...
-
இந்தியா மாநிலங்கள்-28 தேசியசின்னம்-சாரநாத் சிம்ம தூண் (இதில் நான்கு சிங்கங்கள் நான்கு திசைகளில் பார்த்தபடி உள்ளன.இதன் அடிப்பாகத்தில்...
Comments
Labels
கல்வி
கல்வி தகவல்கள்
மருத்துவம்
அரசியல்
ஆரோக்கியம்
உடல் நலம்
விண்வெளி ஆராய்ச்சி
வேலைவாய்ப்பு
கணினி தகவல்கள்
அறிவியல்
மொபைல்
உளவியல்
சட்டம்
பொது அறிவு
இயற்கை
இலவச மென்பொருட்கள்
உயிரித் தொழில்நுட்பம்
செய்திகள்
ஜோதிடம்
தகவல்கள்
புள்ளியியல்
வரலாறு
ஆராய்ச்சி
உயிரியல்
கதைகள்
காலநிலை
குரூப்-2 தேர்வு
புவியியல்
மின்னூல்
இலவச மடிக்கணினி
கணிதம்
சமுதாயம்
சூரியக் குடும்பம்
டி.என்.பி.எஸ்.சி
திருமணம்
தேர்தல் முடிவுகள்
தொழில்நுட்பம்
புகையிலை
பொதுத் தேர்வு
மக்கள் தொகை
விருது
No comments: