2ஜி ஊழல்:
Posted by: MSB Posted date: 21:36 / comment : 0
FILE
டெல்லியில் குறிப்பிடப்படாத ஒரு இடத்திற்கு வரவழைக்கப்பட்ட சிவசங்கரனிடம், ஏர்செல் தலைவராக இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக அப்போது மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறனுடன் நடந்த கடிதத் தொடர்பு குறித்து வினாக்களை எழுப்பினர். அதற்கு சிவசங்கரன் அளித்த பதிலை பதிவு செய்தனர்.
FILE
3 பில்லியன் டாலர் மதிப்புடைய சிவா குழுமத்தின் தலைவரான சி்வசங்கரன், ஏர்செல் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார். 2006ஆம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு கோரி மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகத்திற்கு விண்ணப்பம் செய்தார்.
ஆனால் அவரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. பிறகு அமைச்சர் தயாநிதி மாறன் கொடுத்த அழுத்ததிற்கு உட்பட்டு மலேசியாவின் மாக்சிஸ் நிறுவனத்திற்கு 74 விழுக்காடு பங்குகளை விற்றார். அத்தோடு ஏர்செல் நிறுவனம் கைமாறியது. அதன் பிறகு நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு வட்டங்களுக்கும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏர்செல் நிறுவனம் பெற்றது.
இதற்குக் கைமாறாக, தயாநிதி மாறனின் சகோதரரான கலாநிதி மாறன் நடத்தும் சன் டைரக்ட் எனும் நேரடி தொலைக்காட்சி வசதி தரும் நிறுவனத்தில் மாக்சிஸ் நிறுவனம் 599 கோடி முதலீடு செய்தது.
2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தை புலனாய்வு செய்துவரும் ம.பு.க. இப்போது அந்த ஊழல் எங்கேயிருந்து தொடங்கியது என்று விசாரிக்க ஆரம்பித்துள்ளது. எனவே தயாநிதி மாறன் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது நடந்த முறைகேட்டை விசாரித்து வருகிறது.
About MSB
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
நீங்களே ஜோதிடம் பார்பதற்கான சிறந்த மென்பொருள் இதோ உங்களுக்காக... தமிழ் ஜோதிட மென்பொருள் இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்துங்கள். உ...
-
விடலைப் பருவம் விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வள...
-
உடலமைப்பு, முக அழகி...
-
தமிழ்நாட்டிலுள்ள இடைநிலை ஆசிரியருக்கான பயிற்சிப் பள்ளிகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் ...
-
இந்தியாவின் தட்பவெப்ப நிலை இந்தியா ஒரு பரந்த துணைக் கண்டமாக இருப்பதனால் இந்தியாவின் தட்பவெப்ப நிலை ( Climate of India ) (இந்தியாவின் தட்ப...
-
பொன்னியின் செல்வன் , கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது...
-
பாலியற் கல்வி எனப்படுவது பால் தன்மை , இனப்பெருக்கம் , பாலுறவு , கருத்தடைச் சாதனங்கள் மற்றும் ஏனைய மனித பாலியல் நடத்தைகள் பற்றியதான கல்வியாகு...
-
புவியியல் ஆள்கூற்று முறை அகலாங்கு மற்றும் நெட்டாங்குகளை காட்டும் புவியின் வரைப்படம் புவியியல் ஆள்கூற்று முறை ( Geographic coordinate...
-
மைக்ரோசாப்ட் மாணவர்களுக்கு வழங்கும் இலவச மென்பொருட்கள் கணினி உலகின் முன்னோடி நிறுவனமான மைக்ரோசாப்ட் மாணவர்களுக்கு இலவச அதன் மென்பொருட்களை வ...
-
உயிரித் தொழில்நுட்பத்தின் வரலாறு கி.பி.1ஆம் நூற்றாண்டு வரை கி. மு. 8,000 - மனிதர்கள் பயிர் விளைவிக்கவும் வீட்டு விலங்குகளை வளர்க்கவும் பழக...
Comments
Labels
கல்வி
கல்வி தகவல்கள்
மருத்துவம்
அரசியல்
ஆரோக்கியம்
உடல் நலம்
விண்வெளி ஆராய்ச்சி
வேலைவாய்ப்பு
கணினி தகவல்கள்
அறிவியல்
மொபைல்
உளவியல்
சட்டம்
பொது அறிவு
இயற்கை
இலவச மென்பொருட்கள்
உயிரித் தொழில்நுட்பம்
செய்திகள்
ஜோதிடம்
தகவல்கள்
புள்ளியியல்
வரலாறு
ஆராய்ச்சி
உயிரியல்
கதைகள்
காலநிலை
குரூப்-2 தேர்வு
புவியியல்
மின்னூல்
இலவச மடிக்கணினி
கணிதம்
சமுதாயம்
சூரியக் குடும்பம்
டி.என்.பி.எஸ்.சி
திருமணம்
தேர்தல் முடிவுகள்
தொழில்நுட்பம்
புகையிலை
பொதுத் தேர்வு
மக்கள் தொகை
விருது
No comments: