Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

வாஷிங்டன்:அமெரிக்க வாழ் இந்தியர்கள் மூன்று ‌பேருக்கு அமெரிக்காவி்ன் உயரிய விருதான ஜனாதிபதி விருது கிடைத்துள்ளது. அமெரிக்காவில் பல்வேறுதுறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அந்நாட்டின் உயரிய விருதான ஜனாதிபதி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான விருது பெறுவதற்கு 94பேர்கள் அடங்கிய பெயர்பட்டியல் பரிசீலிக்கப்பட்டது. இதில் ப‌ொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் சிறப்பாக பணிபுரி்ந்ததற்காக டாக்‌டர் கார்த்திக் ஏ. ஸ்ரீனிவாசன், சுமிதாபென்னாத்தூர், மற்றும் ஹரிஸ் ச‌ரோப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு அதிபர் ஓபாமா விருது வழங்கிபாராட்டு தெரிவித்தார். இவர்களில் ஸ்ரீனிவாசன் அறிவியல் தொழில் துறையில் நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சி குழுவின் தலைவராக உள்ளார்.சுமிதா பென்னாத்தூர் கலிபோர்னியா பல்கலைகழகத்தி்ல மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பரிவில் துணை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். சரோப் பயோ‌மெடிக்கல் துறையின் தலைமப்பொறுப்பு வகித்து வருகிறார். 
please comment!!!