பஸ் கட்டணம் உயர்வு
Posted by: MSB Posted date: 13:50 / comment : 0
பத்து ஆண்டுகளுக்குப்பின் பஸ் கட்டண உயர்வு :54 சதவீதம் வரை உயர்கிறது
தமிழக அரசு, பஸ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளதால், வெளியூர்களுக்குச் செல்லும் பஸ்களின் கட்டணம், சராசரியாக 54 சதவீதம் வரை உயர்கிறது. கடந்த 2001ம் ஆண்டின் இறுதியில்தான் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப்பின், தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
நகரம் கி.மீ., டீலக்ஸ் சூப்பர் டீலக்ஸ் அல்ட்ரா டீலக்ஸ்
திருச்சி 322 180 (105) 200 (130) 245 (180)
மதுரை 450 255 (145) 275 (180) 320 (240)
தஞ்சை 365 210 (118) 225 (140) 270 (190)
நெல்லை 613 350 (200) 375 (240) 435 (320)
கோவை 510 290 (165) 310 (200) 360 (270)
சேலம் 341 195 (115) 210 (135) 245 (180)
புதுச்சேரி 136 195 (115) 210 (135) 240 (180)
மதுரை 450 255 (145) 275 (180) 320 (240)
தஞ்சை 365 210 (118) 225 (140) 270 (190)
நெல்லை 613 350 (200) 375 (240) 435 (320)
கோவை 510 290 (165) 310 (200) 360 (270)
சேலம் 341 195 (115) 210 (135) 245 (180)
புதுச்சேரி 136 195 (115) 210 (135) 240 (180)
எப்போது அமலுக்கு வரும்?
இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, "அரசு புதிய கட்டணத்தை அறிவித்துள்ளது. இதுகுறித்த ஆணை இன்னும் வரவில்லை என்றாலும், கி.மீ., அடிப்படையில் கட்டணத்தை உயர்த்தி பட்டியல் தயாரித்து வருகிறோம். அரசு உத்தரவு கிடைத்ததும், கட்டண உயர்வு அமலுக்கு வரும். இதற்கு இன்னும் ஒரு வாரம் வரை ஆகலாம்' என்றார்.
மற்ற தென் மாநிலங்களுக்கு இணையாக, தமிழகத்தில், பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், பஸ் கட்டண உயர்வு தொடர்பான விவாதங்கள் அரசியல் ரீதியாக ஏற்படும் போதெல்லாம், மற்ற மாநிலங்களோடு ஒப்பீடு செய்து, ஆளுங்கட்சி பதிலடி தருவது வழக்கம். ஆனால், தற்போதைய கட்டண உயர்வு, தென் மாநிலங்களுக்கு இணையாக உள்ளது.
எவ்வளவு?
தென் மாநிலங்களைப் பொறுத்தவரை, கடைசியாக கர்நாடகாவில், கடந்த ஜூன் மாதமும், ஆந்திராவில் ஜூலை மாதமும், கேரளாவில் ஆகஸ்ட் மாதமும் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்படி, புறநகரில் இயக்கப்படும் சாதாரண பஸ்களுக்கு, ஒரு கி.மீட்டருக்கு; கர்நாடகாவில் 43 பைசாவும், ஆந்திராவில் 50 பைசாவும், கேரளாவில் 55 பைசாவும் வசூலிக்கப்படுகிறது.
தென் மாநிலங்களைப் பொறுத்தவரை, கடைசியாக கர்நாடகாவில், கடந்த ஜூன் மாதமும், ஆந்திராவில் ஜூலை மாதமும், கேரளாவில் ஆகஸ்ட் மாதமும் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்படி, புறநகரில் இயக்கப்படும் சாதாரண பஸ்களுக்கு, ஒரு கி.மீட்டருக்கு; கர்நாடகாவில் 43 பைசாவும், ஆந்திராவில் 50 பைசாவும், கேரளாவில் 55 பைசாவும் வசூலிக்கப்படுகிறது.
தமிழகத்தில் இதுவரை, 28 பைசா வசூலிக்கப்பட்டு வந்தது; இது, 42 பைசாவாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், சொகுசு (டீலக்ஸ்), அதி சொகுசு (சூப்பர் டீலக்ஸ்), அதிநவீன சொகுசு (அல்ட்ரா டீலக்ஸ்) பஸ்களுக்கான கட்டண உயர்வும், பிற மாநிலங்களுக்கு இணையாக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் இயங்கும் குளிர்சாதன பஸ்களுக்கு தற்போது, கி.மீட்டருக்கு, 85 பைசா வசூலிக்கப்படுகிறது. "ஏசி' பஸ்களுக்கு கேரளாவில், கி.மீட்டருக்கு, 90 பைசாவும், கர்நாடகாவில், 1.34 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டண உயர்வு குறித்த நேற்றைய அறிவிப்பில், "ஏசி' பஸ்களின் கட்டண உயர்வு குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
தென் மாநிலங்களில் வசூலிக்கப்படும் பஸ் கட்டண விவரம் (கி.மீ.,):
*தமிழகத்தில் பழைய கட்டணம், அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.
மாநிலம் புறநகர் (சாதாரண பஸ்கள்) டீலக்ஸ் சூப்பர் டீலக்ஸ் அல்ட்ரா டீலக்ஸ்
ஆந்திரா 50 62 70 82
கர்நாடகா 43 65 80 102
கேரளா 55 60 65 75
தமிழ்நாடு 42 (28) 56(32) 60(38) 70(52)
ஆந்திரா 50 62 70 82
கர்நாடகா 43 65 80 102
கேரளா 55 60 65 75
தமிழ்நாடு 42 (28) 56(32) 60(38) 70(52)
* தமிழகத்தில், கடந்த 2001, டிசம்பர் மாதத்திற்கு பிறகு, அதிகாரப்பூர்வமாக பஸ் கட்டணம் உயர்த்தப்படுவதாக, நேற்று (17ம் தேதி) அறிவிப்பு வெளியாகியுள்ளது.
About MSB
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
உடலமைப்பு, முக அழகி...
-
விடலைப் பருவம் விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வள...
-
நீங்களே ஜோதிடம் பார்பதற்கான சிறந்த மென்பொருள் இதோ உங்களுக்காக... தமிழ் ஜோதிட மென்பொருள் இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்துங்கள். உ...
-
தமிழ்நாட்டிலுள்ள இடைநிலை ஆசிரியருக்கான பயிற்சிப் பள்ளிகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் ...
-
இந்தியாவின் தட்பவெப்ப நிலை இந்தியா ஒரு பரந்த துணைக் கண்டமாக இருப்பதனால் இந்தியாவின் தட்பவெப்ப நிலை ( Climate of India ) (இந்தியாவின் தட்ப...
-
பொன்னியின் செல்வன் , கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது...
-
பாலியற் கல்வி எனப்படுவது பால் தன்மை , இனப்பெருக்கம் , பாலுறவு , கருத்தடைச் சாதனங்கள் மற்றும் ஏனைய மனித பாலியல் நடத்தைகள் பற்றியதான கல்வியாகு...
-
புவியியல் ஆள்கூற்று முறை அகலாங்கு மற்றும் நெட்டாங்குகளை காட்டும் புவியின் வரைப்படம் புவியியல் ஆள்கூற்று முறை ( Geographic coordinate...
-
மைக்ரோசாப்ட் மாணவர்களுக்கு வழங்கும் இலவச மென்பொருட்கள் கணினி உலகின் முன்னோடி நிறுவனமான மைக்ரோசாப்ட் மாணவர்களுக்கு இலவச அதன் மென்பொருட்களை வ...
-
உயிரித் தொழில்நுட்பத்தின் வரலாறு கி.பி.1ஆம் நூற்றாண்டு வரை கி. மு. 8,000 - மனிதர்கள் பயிர் விளைவிக்கவும் வீட்டு விலங்குகளை வளர்க்கவும் பழக...
Comments
Labels
கல்வி
கல்வி தகவல்கள்
மருத்துவம்
அரசியல்
ஆரோக்கியம்
உடல் நலம்
விண்வெளி ஆராய்ச்சி
வேலைவாய்ப்பு
கணினி தகவல்கள்
அறிவியல்
மொபைல்
உளவியல்
சட்டம்
பொது அறிவு
இயற்கை
இலவச மென்பொருட்கள்
உயிரித் தொழில்நுட்பம்
செய்திகள்
ஜோதிடம்
தகவல்கள்
புள்ளியியல்
வரலாறு
ஆராய்ச்சி
உயிரியல்
கதைகள்
காலநிலை
குரூப்-2 தேர்வு
புவியியல்
மின்னூல்
இலவச மடிக்கணினி
கணிதம்
சமுதாயம்
சூரியக் குடும்பம்
டி.என்.பி.எஸ்.சி
திருமணம்
தேர்தல் முடிவுகள்
தொழில்நுட்பம்
புகையிலை
பொதுத் தேர்வு
மக்கள் தொகை
விருது

No comments: