Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

இந்தியாவில் இயங்கி வரும் ஷெட்யூல்டு வங்கிகளில் கேரளாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் சவுத் இந்தியன் வங்கி தமிழ்நாட்டிலும் மிகவும் அறியப்பட்டுள்ள முன்னணி தனியார் வங்கியாகும். திருச்சூரை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த வங்கியின் கோல்கட்டா கிளைகளில் 14 புரொபேஷனரி கிளரிகல் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவைகள்: சவுத் இந்தியன் வங்கியின் புரொபேஷனரி கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க 31.05.2011 அன்று 26 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பைக் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். கலை போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றிருப்பவர்கள் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் கம்ப்யூட்டரை இயக்குவதில் நல்ல திறமையும் கூடுதலாகத் தேவைப்படும்.
இதர விபரங்கள்: சவுத் இந்தியன் வங்கியின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.250/-ஐக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை South Indian Bank என்ற பெயரில் கோல்கட்டாவில் மாற்றத்தக்க டி.டி.,யாக எடுத்து அனுப்ப வேண்டும். இந்தப் பதவிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். முழுமையான விபரங்களுக்கு இந்த வங்கியின் இணையதளத்தைப் பார்க்கவும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்துடன், வயது, கல்வி ஆகியவற்றுக்கான சான்றுகளின் சுய உறுதியளிக்கப்பட்ட கையொப்பத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பின்வரும் முகவரிக்கு 10.11.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது தவறாமல் Application for the post of PRO.Clerks என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
முகவரி:
The South Indian Bank Ltd.,
Regional Office,
Jayasree Inn, 1st Floor,
38 G.G., Avenue, KOLKATTA - 700013.
விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய இறுதி நாள் : 10.11.2011
இணையதள முகவரி: www.southindianbank.com/UserFiles/KOLKATA_ANNEXURES.pdf
please comment!!!
உடலிலுள்ள உறுப்புகள், பல லட்சக்கணக்கான திசுக்களால் உருவாக்கப்பட்டது. பல, சிறிய செல்கள் அடங்கியது தான் திசு. இந்த திசுக்கள் தான் உடல் உறுப்பாகின்றன. ஒவ்வொரு உறுப்பும், ஒவ்வொரு வகை செல்களை, உதாரணமாக, தோல் செல், சதை செல், இதய செல், நரம்பு செல் எனக் கொண்டுள்ளது.

செல்லின் வேலைகள்: இந்த செல்கள் இரண்டு செல்லாக உருவாகி, தேய்மானமடைந்த செல்களை அப்புறப்படுத்தி, அமர்கிறது. செல் பெருக்கம் நடப்பது இயற்கை. செல் இரண்டாக பிரிந்து, பின் அதுவே பன்மடங்காக பெருகி, கட்டியாக வளர்கிறது. இதில் இரண்டு வகை. தொல்லை தராத கட்டியை, "பினைன் கட்டி' என்கிறோம். இக்கட்டியால், எந்தப் பாதிப்பும் இருக்காது. எனினும், அவ்வப்போது பார்த்துக் கொள்ள வேண்டும். "மெலிக்னன்ட் கட்டி' தான், ஆபத்தான கட்டி. பல மடங்கு செல்களாக குட்டி போட்டு, கட்டுக்கு அடங்காத வளர்ச்சியை கொடுத்து, எந்த உறுப்பிலிருந்து வளர்கிறதோ, அந்த உறுப்பை சீரழித்து, உயிரை அழித்து விடுகிறது. இக்கட்டியை ஆரம்பத்திலேயே கட்டுப் படுத்த வேண்டும்.

கேன்சர் வர காரணங்கள்

* சாதாரண நிலையில், செல்கள் தாறுமாறாக வளர்ச்சி கண்டு, டி.என்.ஏ.,வில் மாற்றம் ஏற்பட்டு, செல்லின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
* புகைப் பிடிப்பதால், புகையிலையால் ஏற்படும் விளைவு, அளவுக்கு மீறிய மதுப்பழக்கம். ஜங்க்புட்.
* பாரம்பரியத் தன்மை
* பென்சைன் போன்ற ரசாயனப் பொருட்கள்
* அதிக ரேடியோ கதிர்கள் படுதல்
* வைரஸ்இதய புற்றுநோய்கள்
* முதன்மையான புற்று நோய், இதய தசைகளிலிருந்து வருபவை. இவை பினைன் வகை.
* இரண்டாம் நிலை, மற்ற பகுதியில் வந்த புற்றுநோய், இதயத்திற்கு பரவுவதால் வருபவை.
* மூன்றாவது வகை, இதய வால்வுகளில் வரும், "பாப்பிலாரி பைப்ரோயலாஸ் டோமா' என்ற வகை. இதனால் திடீர் மரணம் ஏற்படும்.

இதய கட்டிகளில், "மிக்சோமா' என்ற இடது மேலறையில் வரும் கட்டி தான், பிரசித்தி பெற்றது. இதுதான் வழக்கமாக பெண்களுக்கு வரும். இதை, எக்கோ பரிசோதனை மூலம் கண்டறியலாம். 75 சதவீதம், இடது மேலறையில் தான் இந்த கட்டி வரும். வலது மேலறையில் வருவது குறை வே.

மிக்சோமாவின் அறிகுறிகள்: இடது மேலறை மிக்சோமா, "மைட்டிரல் ஸ்டெனோசிஸ்' என்ற ஈரிதழ் வால்வு சுருக்கம் போல இருக்கும். மல்லாந்து படுக்கும் போது மூச்சிரைப்பு, ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் போது மூச்சிரைப்பு, மார்பு வலி அல்லது மார்பு அழுத்தம், தலைசுற்றல், மயக்கம், படபடப்பு, சிறிய வேலை செய்தாலும், மூச்சு வாங்குதல் என்பது, பெண்களுக்கு சாதாரணமாக வருவதால், அவர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.

பொதுவான அறிகுறிகள்: கை விரல்கள் நீல நிறமாக தோன்றுதல், இருமல், நகங்கள் மேலே தூக்கி இருத்தல், அசதி, தன்னையறியாத எடை குறைவு, முட்டிகளில் வலி, வீக்கம். இந்த அறிகுறிகள், இதய உட்சுவரான எண்டோ கார்டியத்தில் ஏற்படும், "எண்டோ கார்டைட்டிஸ்' என்ற நோய் போல இருக்கும். எண்டோ கார்டைட்டிஸ், விபரீதமான நோய்; கண்காணிக்க வேண்டும். வலது மேலறை மிக்சோமா, எந்தவித தொல்லை இல்லாமல், 15 செ.மீ., (5 அங்குலம்) வரை வளர்ந்து விடும். எவ்வித பாதிப்பும் இல்லாமல் நோயாளி வலம் வருவார். இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம், வெட்டி எடுக்க வேண்டும். அப்படி சரிவர எடுக்காவிட்டால், திரும்பவும் வரும்.

முக்கிய பரிசோதனைகள்: எக்கோ கார்டியோ கிராம், இ.சி.ஜி., டாப்ளர் பரிசோதனை, எம்.ஆர்.ஐ., இதய ஊடுறுவல் பரிசோதனைகள், ஆஞ்சியோகிராம்.

மிக்சோமாவின் விளைவுகள்: தக்க சிகிச்சை செய்யாவிட்டால், இந்த மிக்சோமாவிலிருந்து கட்டிகள் வெளியேறி, மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தை அடைத்து, பக்கவாதம் உண்டாகலாம். மேலும், கண், கால் ஆகிய இடங்களுக்கு சென்று, அங்கு கட்டியாக வளரலாம். இதை உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிடில், மரணம் ஏற்படலாம்.
இதய துடிப்பு மாறுபாடு, நுரையீரலில் நீர் சேர்தல், பல பாகங்களில் ரத்த குழாய் அடைப்பு ஆகியவை, ஈரிதழ் வால்வை முழுவதுமாக அடைத்து, மரணத்தை வரவழைக்கும். இந்த கட்டி இருந்தால், உடனடியாக பரிசோதனை செய்து, தகுந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
please comment!!!
நியூயார்க்: உலக மக்கள் தொகை, 700 கோடியை எட்டுகிறது. ஐ.நா., மக்கள் தொகை நிதி நிர்வாக இயக்குனர் பபாதுண்டி ஓசோடைம்ஹின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்னும் நான்கு நாட்களில், உலக மக்கள் தொகை, 700 கோடியாகிறது. உலக மக்கள் தொகையில், 10 முதல், 24 வயதுள்ளவர்களின் எண் ணிக்கை, 180 கோடி. எதிர்காலம், இளைஞர்களின் கையில் உள்ளதால், இவர்களின் கல்வி மற்றும் சுகாதாரத்தில் உலக நாடுகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த விஷயங்களுக்காக அதிகம் செலவிடப்பட வேண்டும்.

எவ்வளவு தான் நவீன மயமானாலும் ஆண், பெண் மற்றும் இனப்பாகுபாடுகள், பல நாடுகளில் நிறையவே காணப்படுகின்றன. இந்த பாகுபாடுகள் மறைந்தால் தான், பொருளாதாரம் மற்றும் பல துறைகளில் வளர்ச்சி காண முடியும். வளரும் நாடுகளில் இன்னும் அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை. இந்த நாடுகளில் உள்ள வளர் இளம் பருவத்தினருக்கு செக்ஸ் கல்வி பற்றியோ, கருத்தடை பற்றியோ, எய்ட்சிலிருந்து பாதுகாத்து கொள்ளும் அறிவோ போதிய அளவுக்கு இல்லை. இவ்வாறு பபாதுண்டி ஓசோடைம்ஹின் கூறியுள்ளார்.

உ.பி.,யில் விழா: வரும் 31ம்தேதி, மக்கள் தொகை 700 கோடியை எட்டுவதால் இதற்கான விழாவை உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. "பிளான்' என்ற சர்வதேச அமைப்பு இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து இந்த அமைப்பின் தலைவர் நைஜல் சாப்மேன் குறிப்பிடுகையில், " உலகம் முழுவதும் பெண்களுக்கு சம உரிமை மறுக்கப்படுகிறது. பொருளாதார காரணங்களுக்காக இந்தியாவில் பெண் சிசு கொலை அதிகம் நடக்கிறது. இதன் காரணமாக பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தியாவில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகள் என்ற நிலை காணப்படுகிறது. பஞ்சாபில் இந்த நிலை இன்னும் மோசம். அங்கு ஆயிரம் பையன்களுக்கு 846 சிறுமிகள் என்ற விகிதாசாரம் காணப்படுகிறது. உ.பி.யில் பிறப்பு விகிதம் அதிகம் என்பதால் 700வது கோடி குழந்தையின் பிறப்பை லக்னோவில் கொண்டாட உள்ளோம். 700வதுகோடி குழந்தைக்கு சான்றிதழும் அளிக்க உள்ளோம். பெண் குழந்தைகளை போற்றும் விதத்தில் இந்த விழா அமைய உள்ளது' என்றார்.

please comment!!!
காற்றைப்போல ஊழலும், லஞ்சமும் அனைத்து நாடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. என்றாலும், நமது நாட்டில் லஞ்சம் வாங்குவதும், ஊழலில் ஈடுபடுவதும் "ஒருவிதத் திறமை'யாகவே பார்க்கப்படுகிறது.  அதிலும் குறிப்பாக, இத்தகைய சேட்டைகளைச் செய்துவிட்டு, சட்டத்தின் ஓட்டைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தித் தப்பித்துக்கொள்வது சாகசக் கலையாகவே பார்க்கப்படுகிறது. அதில் ஈடுபடுவோர் சாதிக்கத் தெரிந்தோராகப் பார்க்கப்படுகின்றனர்.  சான்றிதழ் வாங்குவதிலிருந்து சகலத்திலும் தொடரும் லஞ்சம், நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது என்பதில் தன் உச்சக்கட்ட கைவரிசையைக் காட்டியது.  அதேபோலத்தான் ஊழலும். எந்தத் துறை, எந்தப் பதவி என்றில்லாமல் அனைத்துத் துறைகளிலும், பதவிகளிலும் அது தன் கைங்கர்யத்தைக் காட்டி தனியாட்சி நடத்துகிறது.  ஒழுக்கமும் மனித நேயமும் பின்தங்கினாலும் பரவாயில்லை. வாழ்க்கைத் தரம் உயர்ந்தால்போதும் என்றே மேல்நிலைப் பதவிகளில் உள்ளோர்கூட கீழான செயல்களைச் செய்யத் தலைப்படுகின்றனர். அதன் விளைவுதான் லஞ்சமும், ஊழலும்.  பணம், பதவி, உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டே ஊழலுக்கும், லஞ்சத்துக்கும் அவர்கள் அடிமைப்படுகிறார்கள். நாளடைவில் எந்தக் காரியம் என்றாலும் அதில் எவ்வளவு ஆதாயம் கிடைக்கும் என்பதிலேயே அவர்களின் முழுக் கவனமும் பதியத் தொடங்கிவிடுகிறது.  இத்தகைய தவறான செயல்களிலும், குற்றங்களிலும் ஈடுபடுவோர் சிறிதும் வெட்கப்படுவதில்லை. மாறாக அவர்கள் நெஞ்சை நிமிர்த்தி புன்னகையுடன் நடப்பதைப் பார்க்க முடிகிறது.  தங்கள் தவறுகள் அனைவருக்கும் தெரிந்தாலும்கூட தங்களை நேர்மையாளர்கள், பரிசுத்தவான்கள்போல வேதம் ஓதி தங்கள் சாத்தான் முகங்களை அவர்கள் எளிதாக மறைத்துக் கொள்கின்றனர்.  "உழைக்காமல் உண்பவன் திருடன்' என்றார் நம் தேசப்பிதா. அதனால்தானோ என்னவோ ஊழல்வாதிகளும், லஞ்சப் பேர்வழிகளும் நேர்மையாளர்களைவிட அதிகமாக உழைக்கின்றனர். ஆனால் அவர்களின் கடின உழைப்பும், கவனமும் இத்தகைய குற்றங்களைச் செய்வதற்கும், பிறகு கைது, தண்டனை போன்ற நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்குமே உதவுகின்றன.  லஞ்சம், ஊழலைக் கண்டிப்பாக ஒழித்தே தீர வேண்டும் என நமது அரசியல்வாதிகள் ஆவேசமாக முழங்குகிறார்கள் என்றால் ஏற்கெனவே பரபரப்பாகப் பேசப்படும் ஊழல் குழிதோண்டிப் புதைக்கப்படப்போகிறது என்றோ, விரைவில் இன்னொரு மெகா ஊழல் வெளிவரப்போகிறது என்றோதான் அர்த்தமாகிறது. இதை அண்மைக்கால சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.  நமது நாட்டில் நடந்த பெரிய ஊழல்கள் என எடுத்துக்கொண்டால் சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஒருசிலவற்றை மட்டுமே நினைவுகூரலாம். ஆனால், அண்மைக்காலத்தில் பெரிய ஊழல்கள் ஆண்டுதோறும் என்பதிலிருந்து மாறி மாதந்தோறும் என வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  ஒன்றையொன்று மிஞ்சும்விதமாக வெளிவரும் ஊழல்கள் தேச நலனில் அக்கறை கொண்டிருப்போரை மிகுந்த கவலைக்கும், அச்சத்துக்கும் உள்ளாக்குகின்றன.  வெறும் சட்டம் இயற்றி ஊழலை ஒழித்துவிட முடியாது என்பதும் உண்மைதான். ஆனால், லஞ்சம், ஊழல் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து அதிகபட்ச தண்டனை தருவதன் மூலம் இக் குற்றங்களைப் பெருமளவு குறைக்க முடியும்.  தனக்கு நன்மை செய்யும் ஊழல் பல கோடி மக்களைப் பாதிக்கிறது என்பதை அதில் ஈடுபடுவோரும் மனசாட்சியுடன் எண்ணிப்பார்க்க வேண்டும்.  எண்ணெய் ஊழல், பீரங்கி ஊழல், சுரங்க ஊழல், அலைக்கற்றை ஊழல் எனத் தொடரும் மெகா ஊழல்களின் பட்டியல் நம்மைப் பதைபதைக்கச் செய்கின்றன.  "என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்' என நமது தாய்த்திருநாட்டின் இயற்கை வளங்களின் பெருமைகள் குறித்து எளிய வரிகளில் எடுத்துரைத்தார் கவிஞர் ஒருவர்.  இன்றோ இயற்கை வளங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் பாதுகாவலர்களாக இருக்க வேண்டிய அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் நாட்டின் வளத்தை தங்களால் முடிந்த அளவுக்கு ஊழலின் பெயரால் சுரண்டிக் கொண்டிருக்கின்றனர்.  யுகம்தோறும் அரக்கர்கள் பலரை அழிக்க கடவுள் பத்து அவதாரம் எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் ஊழல் என்ற ஒரேயொரு அரக்கனை அழித்து நீதியை நிலைநாட்ட மட்டுமே கடவுள் பத்து அவதாரம் எடுக்க வேண்டுமோ என்றே தோன்றுகிறது. 
please comment!!!
பிரபஞ்சத்தில் பூமியைத் தவிர உயிரினங்கள் வாழக்கூடிய வேறு கிரகங்கள் உள்ளனவா?
பிரபஞ்ச வெளியில், நமது சூரியனைப் போல சிறியதும் பெரியதுமான ஏராளமான சூரியன்கள் இருப்பது தெரிந்த ஒன்றுதானே! இவற்றில், பூமியில் இருந்து 20 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள "கிளைஸ் 581' என்ற சிவப்புக் குள்ள நட்சத்திரமும் ஒன்று. துலா விண்மீன்களின் கூட்டத்தைச் சேர்ந்த இந்தச் சிறிய நட்சத்திரத்தைச் சுற்றி ஆறு கிரகங்கள் வலம் வருகின்றன. இவற்றுக்கு கிளைஸ் 581 பி, சி, டி, இ, எஃப், ஜி என்று பெயரிட்டிருக்கிறார்கள். இவற்றில் கிளைஸ் 581 ஜி என்ற கிரகத்தில் உயிரினங்கள் வாழக்கூடிய சூழ்நிலை நிலவுவதாக அண்மையில் கலிஃபோர்னியா சாண்டாகுரூஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 
ஓலைக்கூரைகளின் ஊடாக ஊடுருவும் சூரிய ஒளி கீழே தரையில் வட்டங்கள் வட்டங்களாக மட்டுமே விழுவது ஏன்? 
ஓலைக்கூரைகளில் உள்ள துவாரங்கள், துளைகளின் வடிவங்கள் எப்படி இருந்தாலும் ஒளி கீழே தரையில் வட்டப் பொட்டுகளாக மட்டுமே விழும். வட்ட வடிவமாக சூரியன் இருப்பதால்தான் இப்படித் துளைகளின் ஊடாக வருகின்ற சூரிய ஒளிக்கதிர்கள் வட்ட வடிவமாக, சூரியனின் ஏராளமான பிம்பங்களைக் கீழே வீழ்த்துகின்றன. 
காஸ்மிக் கதிர்களைப் பற்றித் தெரியும்? அதென்ன காஸ்மிக் ஆண்டு?
பால் வீதியில் பல நூறு மில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நட்சத்திரங்களில் சூரியனும் ஒன்று. சூரியனைச் சுற்றி நமது பூமி உட்பட எட்டு கோள்களும் தம்மைத் தாமே சுற்றிக் கொண்டு வலம் வருகின்றன. அதுபோலவே பால்வீதியின் மையத்தை அச்சாக வைத்து எல்லா நட்சத்திரங்களும் சுற்றி வருகின்றன.இவற்றில் சூரியன் தன் எட்டு கோள்களோடும் சேர்ந்த பால் வீதியில் சுற்றி வருவதற்கு எடுக்கும் கால அளவே காஸ்மிக் ஆண்டு ஆகும்.பால்வீதியின் மையத்தில் இருந்து 30,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் வினாடிக்கு 220 கீலோ மீட்டர் வேகத்தில் சூரியன் அசைந்து கொண்டிருக்கிறது. இந்த வேகத்தில் சூரியன் ஒரு தடவை சுற்றிவர சுமாராக 250 மில்லியன் ஆண்டுகல் ஆகின்றன. எனவே ஒரு காஸ்மிக் ஆண்டு என்பது 250 மில்லியன் ஆண்டுகள் ஆகும்.விஞ்ஞானிகள் வாஸ்ப் 12-பி என்ற கோளை 2008-ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்கள். இந்தக் கோளில் கார்பன் மிகவும் அதிகமாக இருப்பதால் அங்கு நிறைய வைரங்கள் இருக்கலாம் என்று ஊகிக்கின்றனர். அங்கே ஒரு முறை போய் திரும்பி வந்தால் பெரும் பணக்காரராக ஆகி விடலாம்! ஆனால் இதில் ஒரு பிரச்னை இருக்கிறது...இந்தக் கோள் 1,200 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. (ஏறக்குறைய ஒன்பதரை லட்சம் கோடி கிலோமீட்டர் தூரம்தான் ஒரு ஒளி ஆண்டு) அப்படியானால் நீங்களே கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்... எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் என்பதை...
please comment!!!
பார்வையற்றவர்கள் மற்றும் விபத்தினால் கண் இழந்தவர்களின் முகத்தோற்றத்தை அழகாக மாற்றவும், அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் தொண்டு நிறுவனம் சார்பில், சலுகை விலையில் செயற்கை கண்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

பிறவியிலேயே பார்வை திறன் இல்லாதவர்கள், விபத்தில் கண் பார்வை இழந்தவர்கள், கண் சுருக்கம் மற்றும் கண்புரை உள்ளிட்ட குறைபாடுகள் உடையவர்களின் முகத்தோற்றம் பார்பதற்கு சற்று பொலிவற்று காணப்படும். இதனால், இக்குறைபாடுகளை உடையோர், தாழ்வு மனப்பான்மை காரணமாக தங்களை சமூகத்தில் இருந்து தனிமைபடுத்திக் கொண்டு வாழ்கின்றனர்.இதனால், பார்வையற்றவர்களில் திறமை மிக்க பல சாதனையாளர்களும், சத்தம் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றனர். பார்வையற்றோரின் இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலும், அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் நோக்கிலும் செயற்கை கண்கள் வடிவமைத்து, அவற்றை பொருத்தும் பணியில், திருவான்மியூர்,
"பிரீடம் டிரஸ்ட்' என்ற அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், மருத்துவம் மற்றும் சிறப்பு பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வரும், இந்த அறக்கட்டளை சார்பில் தற்போது, செயற்கை கண் நிபுணர்களைக் கொண்டு கண் பார்வையற்றவர்களுக்கு செயற்கை கண் பொருத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து செயற்கை கண் நிபுணர் திவாகர் கூறியதாவது:கண் பார்வையற்றவர்கள் மற்றும் கண் இல்லாதவர்களுக்கு செயற்கை கண் பொருத்துவதன் மூலம் பார்வை திரும்ப பெறமுடியாது. ஆனால், இழந்த அவர்களது கண் இருப்பது போன்ற தோற்றம் கிடைக்கும். இதனால், பார்வையற்றவர்களுக்கு தங்களுக்கு கண் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை நீங்கி, தன்னம்பிக்கை கிடைக்கிறது.மாற்றுத் திறனாளிகளின் கண் மற்றும் மருத்துவச் சான்றுகளை தீவிரமாக ஆய்வு செய்த பின்னர், மாதிரி அளவெடுத்து செயற்கை கண் வடிவமைக்கப்படுகிறது. "பாலி மீத்தைல் மெத்தாக்கிரை லேட்' என்ற மருத்துவ வகை, பிளாஸ்டிக்கைக் கொண்டு உருவாக்கப்படும் இந்த செயற்கை கண்கள் முற்றிலும் பாதுகாப்பானது. இதை,பொருத்திக்கொள்ள வயது வரம்பு கிடையாது.இந்திய அளவில், செயற்கை கண் வடிவமைப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு ஆகும். தமிழகத்தில் தற்போது, இரண்டு தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செயற்கை கண் வடிவமைக்கப்படுகிறது. இந்த மருத்துவமனைகளில் செயற்கை கண் பொருத்துவதற்கு, நான்கு முதல் ஐந்தாயிரம் வரை செலவு செய்ய வேண்டி யுள்ளதால், அடித்தட்டு மக்கள் இதை பயன்படுத்த முடியாத நிலையுள்ளது.எனவே, ஏழை எளிய மக்களும் பயனடையும் வகையில், எங்களின் அறக்கட்டளையின் சார்பில் தற்போது, குறைந்த விலைக்கு செயற்கை கண் பொருத்தப்பட்டு வருகிறது. அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்பதே
எங்களது நோக்கம்.ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. பார்வையற்றவர்களுக்கு இலவசமாக செயற்கை கண் பொருத்த அரசு முன்வந்தால், அவர்களின் தன்னம்பிக்கை மேம்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

please comment!!!

அ.தி.முக., திமு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., காங்கிரஸ் பா.ஜ.,
மாநகராட்சிகள்
மேயர்(10) 6 0
சென்னை(200) 162 23 1 1
மதுரை(100) 50 9
கோவை (100) 60 8 1 1 2 2
திருச்சி (65) 42 16 1 3
சேலம் (60) 50 8
திருநெல்வேலி (55) 11 4 1
திருப்பூர் (60) 1
ஈரோடு (48) 11
தூத்துக்குடி (60) 28 17 4 1
வேலூர் (60) 23 15 3 4
நகராட்சிகள்
தலைவர்கள் (150) 89 ( 30 முன்னிலை) 23 ( 7 முன்னிலை) 2 1 2
உறுப்பினர்கள் (3,697) 1.452 613 110 47 139 34
பேரூராட்சி
தலைவர்கள் ( 529) 280 110 3 7 24 13
உறுப்பினர்கள் (8,303) 2,763 1,671 370 82 363 178
please comment!!!
இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுத் துறையில் பிரசித்தி பெற்ற எல்.ஐ.சி., நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனமான எல்.ஐ.சி., மியூச்சுவல் பண்டு நிறுவனம் 1989ல் துவங்கப்பட்டது. இந்த நிறுவனம் செபி நிறுவனத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இயங்கி வரும் நிறுவனமாகும்.
எல்.ஐ.சி., நோமுரா மியூச்சுவல் பண்டு நிறுவனத்தின் நாட்டிலுள்ள பல்வேறு மையங்களில் மொத்தம் 35 ரிலேஷன்ஷிப் மேனேஜர்களைப் பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவைகள் என்னென்ன: எல்.ஐ.சி., நோமுரா மியூச்சுவல் பண்டு நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க 01.04.2011 அன்று 25 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக முது நிலை அல்லது பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ, பட்டப் படிப்பு, முது நிலை பட்டப்படிப்பு ஆகிய ஒவ்வொரு நிலையிலும் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்துடன் எம்.எஸ்., ஆபிஸ் பேக்கேஜ்களில் நல்ல பரிச்சயம் தேவைப்படும். விற்பனை மற்றும் வணிக அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை உள்ளது. நேர்காணல் தேர்வு மூலமாக இந்தப் பதவி நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதர விபரங்கள்: எல்.ஐ.சி., நோமுரா நிறுவனத்தின் வாடிக்கையாளர் உறவு மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.100/-க்கான டி.டி.,யை "LIC NOMURA MF AMC LTD.," என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். பின்னர் பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் உங்கள் விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து இதனுடன் சுய சான்றளிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள், டி.டி., வயதுக்கான சான்றிதழ் நகல் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது தவறாமல் Application for the Post & LIC Nomura MF Relationsip Managers என்று குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 31.10.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களைப் பெற இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
முகவரி:
The AGM, Recruitment Cell,
LIC NOMURA Mutual Fund AMC Ltd.,
4th Floor, Industrial Assurance Bldng.,
Opp.Church Gate Station,
MUMBAI 400 020.
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 31.10.2011
இணையதள முகவரி : licnomuramf.com/pdf/advertisment.pdfplease comment!!!
1934ல் நிறுவப்பட்ட பிரிட்டிஷ் கவுன்சில் சர்வ தேச நாடுகளிலும் இயங்கி வருகிறது. மொழி, கலை, மொழியியல், அறிவியல் போன்ற பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு இந்த கவுன்சில் உதவி வருகிறது.
பிரிட்டனுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே நல்லதொரு உறவை மேம்படுத்துவது இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இந்த கவுன்சில் டாக்டர் மன்மோகன்சிங் ஸ்காலர்ஷிப் என்ற பெயரில் ஸ்காலர்ஷிப்களை வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேவைகள்: இந்தியாவில் குடியிருக்கும் பாஸ்போர்ட் வைத்துள்ள இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக முது நிலைப் பட்டப்படிப்பை முடித்திருப்பதோடு இள நிலை மற்றும் முது நிலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தலைமைப் பண்புகளைப் பெற்றவர் என்பதற்கு சான்றாக சான்றிதழ்களையும் வைத்திருக்க வேண்டும். காம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் மூலமாக ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்வதற்கான ஆர்வமும் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில மொழியில் சரளமாகப் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும். 31.12.2011 அன்று 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
இதர தகவல்கள்: பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கும் டாக்டர் மன்மோகன் சிங் ஸ்காலர்ஷிப்பிற்கு தேர்ந்தெடுத்து அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் புது டில்லியில் நடத்தப்படும் நேர்காணலை எதிர்கொள்ள வேண்டும். பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே இந்த ஸ்காலர்ஷிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பிரிட்டிஷ் கவுன்சிலில் சமர்ப்பிக்க வேண்டும். இது குரித்த முழுமையான விபரங்களைப் பெற இந்த அமைப்பின் இணையதளம் மற்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
முகவரி:
Vishu Sharma,
Scholarships,
British Council,
17, Kasturba Gandhi Marg,
New Delhi 110 001.
INDIA.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 31.12.2011
இணையதள முகவரி : www.britishcouncil.org/india&scholarships&drmanmohansing.htm#prog
please comment!!!
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பாராளுமன்றத்தில் இள நிலை எழுத்தர் பணி இடங்கள் 22ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது: பாராளுமன்றத்தின் ஜூனியர் கிளர்க் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
தேவைகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஒரு நிமிடத்திற்கு குறைந்தபட்சம் 40 வார்த்தைகளை டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். இவற்றை ஆங்கிலம் மற்றும் இந்தியில் டைப் செய்பவர்களுக்கு முன்னுரிமை உள்ளது.
அதே போல் ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பை முடித்தவர்களுக்கும் முன்னுரிமை உள்ளது. எழுத்துத் தேர்வு மற்றும் டைப்பிங் தேர்வு மூலமாக இந்தப் பதவிகள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தத் தேர்வு சென்னை, கோல்கட்டா, மும்பை ஆகிய மையங்களில் நடைபெறலாம் என்று தெரிகிறது. முழுமையான தகவல்களைப் பெற இணையதளத்தைப் பார்க்கவும்.
இதர தகவல்கள்: பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்துடன் கையொப்பமிட்ட இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது 'Junior Clerk, Advertisement No.5/2011" என்று குறிப்பிட வேண்டும். முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 08.11.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
முகவரி:
The Joint Recruitment Cell,
Room No.521,
Parliament House Annexe,
New Delhi 110001.
இணையதள முகவரி : http://164.100.47.132/JRCell/Module/Notice/advt.5&2011.pdf"
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 08.11.2011
please comment!!!
புதுடில்லி: சரக்கு ரயில் கட்டணத்தைத் தொடர்ந்து, பயணிகள் ரயிலின் உயர் வகுப்பு கட்டணமும் விரைவில் உயர்த்தப்பட உள்ளது.

ரயில்வே துறையில், நிதி ஆதாரத்தை சரிகட்டுவது தொடர்பாக, கடந்த வாரம், டில்லியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சரக்கு ரயில் கட்டணத்தை, 6 சதவீதம் உயர்த்த, இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதை, சுற்றறிக்கையாக வெளியிட்டு அமல்படுத்தியது ரயில்வே நிர்வாகம்.ரயில்வே மூலம் அனுப்பப்படும் சரக்குக் கட்டணங்கள், 6 சதவீதம் உயர்த்தப்பட்டு, கடந்த 15ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, பயணிகள் ரயிலின் உயர் வகுப்பு கட்டணத்தையும் உயர்த்துவது குறித்து, ரயில்வே நிர்வாகம் தற்போது தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

ரயில்வே நிதி கமிஷனர் பொம்பா பாபர் கூறியதாவது:கடந்த, எட்டு ஆண்டுகளாக ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. பயணிகளின் கட்டண விஷயத்தில், அதிகப்படியான மானிய சலுகை அளிக்கப்பட்டதால், ஏகப்பட்ட நிதி ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன.கட்டுமானப் பணிகள், மேம்பாட்டுப் பணிகள் போன்றவற்றிற்கு, ரயில்வே துறைக்கு, 57 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. தற்போது, ரயில்வேயிடம் நிதி கையிருப்பு மிகக்குறைவாக உள்ளது. இப்பிரச்னையை சமாளிக்க, நிதியமைச்சகத்திடம், 2,100 கோடி ரூபாய் கடன் கேட்டுள்ளோம். இது தொடர்பாக, நிதித்துறை செயலரிடம் பேசியுள்ளோம்.இதற்கு நிதியமைச்சரின் ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக ரயில்வே அமைச்சர் திணேஷ் திரிவேதியும், பிரணாப் முகர்ஜியும் விரைவில் சந்தித்து பேச உள்ளனர். இப்பேச்சுவார்த்தையின் மூலம் சாதகமான பலன் ஏற்படும் என நம்புகிறோம்.

காலியாக உள்ள ரயில்வே நிலங்களை குத்தகைக்கு விட்டு அதன் மூலம் மூலதன நிதியை பெருக்க முயற்சிக்கிறோம். வளர்ச்சி நிதி மூலம் பயணிகளுக்கான வசதிகள், போக்குவரத்து வசதிகள், ஊழியர்களுக்கான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.அரசிடம் கேட்டுள்ள கடன் போதுமானதாக இல்லையென்றாலும். அதிகளவில் வெளியில் கடன் பெற்று கடன்வலையில் சிக்கிக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.ஏற்கனவே, மேற்கு ரயில்வே மார்க்கத்தில் சரக்கு ரயில் போக்குவரத்து தடம் அமைக்க ஜப்பானிடம் கடன் பெற்றுள்ளோம். இதே போன்ற பணியை கிழக்கு பகுதி மார்க்கத்தில் மேற்கொள்ள, உலக வங்கியிடம் கடன் பெற்றுள்ளோம். இந்த கடனையெல்லாம் திரும்ப செலுத்த வேண்டிய கடமை உள்ளது. ஆகவே அதிக கடன் சுமை என்பது ஏற்படாமல் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

நடப்பு நிதியாண்டில் ரயில்வே செயல்பாட்டு திறன் நிர்ணயிக்கப்பட்ட அளவு நிறைவேறுமா என்பது தெரியவில்லை. குறிப்பாக அடிப்படை கட்டுமானப் பணிகளுக்கு நிதி ஆதாரம் அதிகம் தேவை. மேலும் திட்டம் மற்றும் திட்டமில்லா செலவினங்கள் குறைப்பு பற்றியும் அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தேவையில்லாத செலவினங்களை குறைப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். எனினும் ஆறு மாத காலத்திற்கு பிறகு நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கையுள்ளது.விரைவில் உயரும்: அரசிடம் நாங்கள் நிதி கேட்டால், அதற்கு பார்லிமென்ட் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், ரயில் கட்டணத்தை உயர்த்த, யாருடைய அனுமதியும் தேவையில்லை. எனவே தான், பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

இதில் ஏழைகள் பாதிக்கக்கூடாது என்பதற்காக, உயர் வகுப்பு கட்டணத்தை உயர்த்துவது குறித்து யோசித்து வருகிறோம். கட்டணத்தை முறைப்படுத்தும் திட்டமும் எங்கள் பரிசீலனையில் உள்ள விஷயம். உயர்த்தப்பட உள்ள கட்டணமும் அதிகமாக இருக்கக்கூடாது என்பதில், எச்சரிக்கையாக இருக்கிறோம். எனவே தான், அங்கொன்று இங்கொன்றுமாக கட்டண உயர்வை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.ரயில்வே பட்ஜெட் வரை இந்த கட்டண உயர்வுக்காக காத்திருக்க முடியாது. எனவே, உயர் வகுப்பு கட்டணம் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம்.இவ்வாறு பொம்பா பாபர் கூறினார்.

கடந்த, எட்டு ஆண்டுகளாக ரயில் கட்டணம் உயர்வு பற்றி பேச்சே எழுப்பக் கூடாது என்ற நிலையில் மத்திய அரசு இருந்தது. குறிப்பாக, மம்தா பானர்ஜி, ரயில்வே அமைச்சராக இருந்த போது, அது குறித்து அதிக அக்கறை காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை: ""நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் தாயான காடுகள் இந்தியாவில் வெகுவாக குறைந்து விட்டன; சுற்றுச்சூழல் மாசுபாடு, இயற்கை பேரழிவுகள் ஏற்பட இதுவே முக்கிய காரணமாக உள்ளது,'' என, பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரியின் சுற்றுச்சூழல் அமைப்பின் (ஈகோ கிளப்) நாடக இயக்குனர் ராமராஜ் தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள மொத்த நிலப்பரப்பில் அடர்ந்த காடுகள் 33 சதவீதம் இருக்க வேண்டும்; மனித குலம் வாழ தகுந்த சுற்றுச்சூழல் அப்போதுதான் சமச்சீராக இருக்கும். ஆனால், இன்றைய சூழலில் வெறும் 17 சதவீதம் மட்டுமே அடர் காடுகள் இந்தியாவில் உள்ளதாக சேட்டிலைட் தகவல்கள் தெரிவிக்கின்றன; இதனால் இயற்கையின் பஞ்ச பூதங்கள் மனிதனுக்கு எதிராக செயல்பட துவங்கியுள்ளன, என சுற் றுச்சூழல் அமைப்புகள் கூறுகின்றன.
இது பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம் கொண்டு செல்லும் வகையில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில், வன உயிரின வார விழா நடந்தது. இதில் விழிப்புணர்வு நாடகங்கள் கல்லூரி வளாகத்தில் ஆங்காங்கே நடந்தன. நாடகத்தில் மாணவர்கள் பஞ்ச பூதங்கள் வடிவில் வேடமிட்டு நடித்தனர். பஞ்ச பூதங்கள் வடிவில் வந்தவர்கள்,""மரங்களை வெட்டி காடுகளை அழிப்பதால், மனிதர்களை காக்க வேண்டிய நாங்கள் அவர்களுக்கு எதிரிகளாக மாறி வருகிறோம்; இந்நிலை தொடர்ந்தால் படிப்படியாக நாங்கள் உலகை விட்டு சென்று விடுவோம்; எனவே மரங்களை வளருங்கள்,'' என அவை கூறுவது போல் நடித்தனர்.

இது குறித்து அமைப்பின் நாடக இயக்குனர் ராமராஜ் கூறியதாவது: காடுகள்தான் இயற்கையின் பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றிற்கு தாயாக கருதப்படுகிறது. ஆனால், இந்தியாவில் காடுகளின் பரப்பு வெகுவாக இன்று குறைந்து விட்டது. சுற்றுச்சூழல் மாசுபாடு, இயற்கை பேரழிவுகள் ஏற்பட இதுவே முக்கிய காரணமாகும். வளரும் தலைமுறையான கல்லூரி மாணவர்களிடம் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதுவே எங்கள் முக்கிய நோக்கம். தற்போது எங்கள் கல்லூரியில் நடத்தப்படும் நாடகங்கள், வரும் காலத்தில் கோவையின் அனைத்து கல்லூரிகளிலும் நடத்தப்படும். அதன் மூலம் வனங்களை பெருக்க முயற்சி செய்வோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார். தொடர்ந்து அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் தொடர்பான ஆவணப்படம் மாணவர்களுக்கு திரையிடப்பட்டது. 
please comment!!!
வாஷிங்டன்: கடந்த 20 ஆண்டுகளாக பூமியைச் சுற்றிக் கொண்டிருந்த செயற்கைக் கோள் ஒன்று செயலிழந்து பூமியை நோக்கி வந்தது. அது நேற்று காலை பசிபிக் பெருங்கடலில் விழுந்ததாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 1991ம் ஆண்டு Ôஅப்பர் அட்மாஸ்பியர் ரிசர்ச் சேட்டிலைட்Õ (யுஏஆர்எஸ்) என்ற செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது. ரூ.3,525 கோடி செலவில் அனுப்பப்பட்ட அந்த செயற்கைக் கோள் ஓசோன் படலம் மற்றும் பூமியின் வளி மண்டலத்தைப் பற்றி ஆராய்ந்து வந்தது. இது நாசா விஞ்ஞானிகளால் கடந்த 2005ம் ஆண்டு செயலிழக்க வைக்கப்பட்டது. அதன் பிறகு அது பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக சமீபத்தில் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
6,000 கிலோ எடை கொண்ட, பஸ் அளவிலான அந்த செயற்கைக்கோள் நேற்று முன்தினம் பூமியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக நாசா விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். ஒரு நாள் முன்னதாகவோ அல்லது பின்போ வரவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.
பூமியின் தட்பவெப்ப நிலைக்குள் நுழைந்தவுடன் செயற்கைக்கோள் 26 பெரிய துண்டுகளாக உடையும். பூமியின் 75 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ள கடல் பகுதியில் விழுவதற்கே அதிக வாய்ப்பு உள்ளது. தவறினால் வடக்கு கனடாவுக்கும் தென்அமெரிக்காவின் தென்பகுதிக்கும் இடையில் பூமியின் மீது விழும் அபாயமும் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
பூமியில் விழுந்தால் 3,200ல் ஒரு பங்கு மனிதர்கள் மீது விழுந்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரித்தனர். எனினும், யுஏஆர்எஸ் செயற்கைக்கோள் நேற்று அதிகாலையில் பசிபிக் பெருங்கடலில் விழுந்து விட்டதாகவும் அதனால், மனிதர்களுக்கு அபாயம் இல்லை என்றும் நாசா விஞ்ஞானிகள் அறிவித்தனர்.
மதுரை : மதுரை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச வெப்சைட் ஏற்படுத்தித் தர மைக்ரோ இந்தியா கம்ப்யூட்டர் நிறுவனம் முன்வந்துள்ளது.
மாவட்டத்தில் பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர், ஆசிரியர்களுக்கு பயிற்சி, மாணவர்களுக்கு, இமெயில் வசதியை ஏற்படுத்தியது இந்நிறுவனம். தற்போது கல்லூரி மாணவர்களுக்கு இலவச வெப்சைட் வசதியை ஏற்படுத்தித் தர முன்வந்துள்ளது.
இலவச வெப்சைட்டில் மாணவர்கள் தங்கள் சுயவிபரங்கள்
(பயோடேட்டா) பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். போட்டோக்கள், வீடியோ பதிவுகள், சான்றிதழ்களை ஸ்கேன் செய்தும் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் ஒரிஜினல் தொலைந்தாலும்கூட, அவற்றை எங்கிருந்தும் தேவைக்கேற்ப டவுன்லோடு செய்து நகலை பெற வசதி கிடைக்கும்.
மேலும் பல வெளிநாட்டு வெப்சைட்டுகள் மூலம் சம்பாதிக்கவும் வாய்ப்புள்ளதால், அதற்கும் இன்டர்நெட் பயிற்சி அளிக்கப்படும். இதுதவிர தற்காலத்திற்கு தேவையான ஆங்கில பேச்சுப் பயிற்சி, நெட் பாங்கிங், டிக்கெட் ரிசர்வேஷன் போன்றவற்றை மாணவர்கள் தானாகவே செய்யும் வகையில் பயிற்சி அளிக்கப்படும்.
மாணவர்கள் இணையதளத்தை பொறுத்தவரை அப்டேட் செய்யும் வகையில் அவர்களுக்கு இலவச பயிற்சியாகவே அளிக்கப்படும்.
மைக்ரோ இந்தியா அமைப்பின் இயக்குனர் நரேஷ் கூறியதாவது: இதில் சிறந்த மாணவர்களை கண்டறிந்து வேலைவாய்ப்பு வழங்கவும் திட்டம் உள்ளது. இன்டர்நெட்டை முறைப்படி பயன்படுத்த தெரிந்தால் எளிதாக சம்பாதிக்கவும் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அமெரிக்காவின் டாலருக்கு நிகரான இந்திய பணமதிப்பு வீழ்ச்சி அடைவதால், அமெரிக்க முதலீடு அதிகரிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் இன்டர்நெட்டை பயன்படுத்தி சம்பாதிக்கவும் வழி ஏற்படும்.
இதுபோன்ற பயிற்சிகளுக்கு அணுகும் கல்லூரிகளுக்கு சென்று பயிற்சியை துவக்க உள்ளோம். இயக்குனர், இளைஞர் வேலைவாய்ப்பு பயிற்சி அமைப்பு, 5, பைபாஸ் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை-16 என்ற முகவரியில் அணுகலாம். 94433-64567 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

please comment!!!
சென்னை: உதவி தொழிலாளர் நல அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உட்பட, பல்வேறு துறைகளில் 1,628 குரூப்-2 பணியிடங்களுக்கான இறுதி தேர்வுப் பட்டியல், 7ம் தேதி வெளியிடப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் செல்லமுத்து அறிவித்துள்ளார்.
இந்து அறநிலையத் துறை, வருவாய்த் துறை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தொழிலாளர் நலத் துறை உள்ளிட்ட, பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள, 1,628 குரூப்-2 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு, 2010ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி நடந்தது.இதில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், தகுதி வாய்ந்தவர்கள், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி முதல், மார்ச் 28ம் தேதி வரை, நேர்முகத் தேர்வு நடந்தது. ஒரு பணியிடத்திற்கு இரண்டு பேர் வீதம், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் பங்கேற்றவர்களின் மதிப்பெண் பட்டியல், கடந்த ஏப்ரல் முதல் தேதி வெளியிடப்பட்டது. இதற்கிடையே, நேரடி பணி நியமனத்தினால், தங்களது பதவி உயர்வு பாதிக்கப்படும் என்று கூறி, தலைமைச் செயலக ஊழியர்கள் சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில், இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிட, சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை பிறப்பித்தது. இதனால், தேர்வுப் பட்டியலை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் இடைக்காலத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. அதன் பிறகும், தேர்வுப் பட்டியல் வெளியாகவில்லை.
நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்கள், தேர்வுப் பட்டியலை வெளியிடக் கோரி, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகம் முன், திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம், 7ம் தேதிக்குள் ரிசல்ட் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் செல்லமுத்து பேசினார்.
அதைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். இதன்பின், குரூப்-2 தேர்வு முடிவுகள், 7ம் தேதி வெளியிடப்படும் என்று, செல்லமுத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் www.tnpsc.gov.in முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

please comment!!!
வாஷிங்டன்:அமெரிக்க வாழ் இந்தியர்கள் மூன்று ‌பேருக்கு அமெரிக்காவி்ன் உயரிய விருதான ஜனாதிபதி விருது கிடைத்துள்ளது. அமெரிக்காவில் பல்வேறுதுறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அந்நாட்டின் உயரிய விருதான ஜனாதிபதி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான விருது பெறுவதற்கு 94பேர்கள் அடங்கிய பெயர்பட்டியல் பரிசீலிக்கப்பட்டது. இதில் ப‌ொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் சிறப்பாக பணிபுரி்ந்ததற்காக டாக்‌டர் கார்த்திக் ஏ. ஸ்ரீனிவாசன், சுமிதாபென்னாத்தூர், மற்றும் ஹரிஸ் ச‌ரோப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு அதிபர் ஓபாமா விருது வழங்கிபாராட்டு தெரிவித்தார். இவர்களில் ஸ்ரீனிவாசன் அறிவியல் தொழில் துறையில் நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சி குழுவின் தலைவராக உள்ளார்.சுமிதா பென்னாத்தூர் கலிபோர்னியா பல்கலைகழகத்தி்ல மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பரிவில் துணை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். சரோப் பயோ‌மெடிக்கல் துறையின் தலைமப்பொறுப்பு வகித்து வருகிறார். 
please comment!!!