Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

அறிவியல்   >>   சனியின் நிலாவில் ஐஸ்: நாசா கண்டுபிடிப்பு

சனியின் நிலாவில் ஐஸ்: நாசா கண்டுபிடிப்பு

diggShare21
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update


நாசா: சனி கிரகத்தின் சந்திரனான டைட்டனில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகின்றன. அங்கு தண்ணீர் ஐஸ்கட்டியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்த பெரிய கோள் சனி. எடையில் பூமி போல 95 மடங்கும் அளவில் பூமி போல 760 மடங்கும் பெரியது. நமக்கு ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணு என ஒரே ஒரு சந்திரன்தான். மெகா சைஸ் சனி கிரகத்துக்கு 62 சந்திரன்கள்.

சனி கிரகத்தின் தன்மை பற்றியும் அதன் துணைக் கோள்கள் (சந்திரன்) பற்றியும் ஆராய்ச்சி செய்வதற்காக ‘காசினி ஹைகன்ஸ்’ விண்கலத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (நாசா) கடந்த 1997ம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பியது. 7 ஆண்டு பயணத்துக்கு பிறகு சனி ஏரியாவை இது 2004ல் சென்றடைந்தது. பின்னர் அதில் இருந்து தனியே பிரிந்த ஹைகன்ஸ் விண்கலம், சனியின் மிகப்பெரிய நிலாவான டைட்டனில் 2005ல் தரையிறங்கியது. காசினியும் ஹைகன்சும் தங்கள் ஆராய்ச்சி வேலையை சிறப்பாக செய்து வருவதால் அவற்றின் ‘பதவிக்காலம்’ தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆராய்ச்சிக்கு ‘காசினி ஈக்வினாக்ஸ் மிஷன்’ என்று பெயர் மட்டும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இரு விண்கலமும் 2017 வரை மக்கர் பண்ணாமல் இயங்கும் என்று அறிவித்திருக்கிறது நாசா. இந்நிலையில், டைட்டனை சுற்றி வெண் மேகக் கூட்டங்கள் இருப்பது காசினி விண்கலத்தின் அகச்சிவப்பு ஸ்பெக்ரோமீட்டர் மூலம் தற்போது தெரியவந்துள்ளது. இதுபற்றி நாசா விஞ்ஞானி ராபர்ட் சாமுவேல்சன் கூறியதாவது: டைட்டனின் வளிமண்டலத்தில் மீத்தேன், ஈத்தேன் வாயுக்கள் அதிகம் இருக்கின்றன. அவைதான் வெண் மேகங்களை உருவாக்குவதாக ஏற்கனவே தெரியவந்தது.

இவை அச்சு அசலாக பூமிக்கு மேல் நீராவியால் உருவாகும் மேகங்கள் போலவே இருக்கின்றன. அந்த மேகம் ஆவியானதும் அதில் இருந்து ஹைட்ரோகார்பன்களும் இதர ஆர்கானிக் தனிமங்களும் தூசி போல தொடர்ச்சியாக டைட்டனில் படிகின்றன என்றும் தெரிகிறது. இவ்வாறு வளிமண்டலத்தில் இருக்கும் மேகம் மற்றும் திவலைகளின் அளவு பற்றி தெரிந்தால் அவை எதனால் ஆக்கப்பட்டது? டைட்டனில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா என்று கண்டுபிடித்துவிடலாம். ஒருவேளை, தண்ணீர் இருக்கும் பட்சத்தில், டைட்டனில் அது ஐஸ் பாறையாகத்தான் இருக்கும். இவ்வாறு ராபர்ட் கூறியுள்ளார்.

பூமிக்கு அருகில் சந்திரன் வருவதால் பூகம்பம் ஏற்படுமா?

சென்னை: நாளை பூமிக்கு அருகில் சந்திரன் வருவதால், பூகம்பமோ, சுனாமியோ ஏற்படும் என பீதியடையத் தேவையில்லை என விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். முழு நிலவை காட்டும் பவுர்ணமி ஒவ்வொரு மாதமும் வரும். ஆனால் நாளை வருவது மெகா பவுர்ணமி. ஆம், பூமிக்கு அருகில் சந்திரன் வருவதால் வழக்கத்தைவிட சற்று பெரியதாக இருக்கும் என்கிறார்கள் விஞஞானிகள். 'சூப்பர்மூன்' என்ற இந்த அதிசயம், 20 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழப் போகிறது.

இதற்கு முன்பு 1955, 1974, 1992 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் பூமிக்கு அருகில் சந்திரன் வந்துள்ளது. "வானில் அதிசயங்கள் நிகழும்போது, பூகம்பம், எரிமலை வெடிப்பு உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது" என கடந்த வாரம் செய்தி வெளியானது. இதை மெய்யாக்கும் வகையில், 12ம் தேதி ஜப்பானில் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டு பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மேலும் பல நாட்டு மக்கள் பீதியடைந்துள்ளனர். ஆனால், பூகம்பம், எரிமலை வெடிப்பு உட்பட பூமியில் நிகழும் மாற்றங்களுக்கு சந்திரன் எந்த வகையிலும் காரணமாக அமையாது என்றும் இதுபற்றி பயப்படத் தேவையில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கடல் சீற்றம் இருக்கும்

சந்திரன் பூமியை நெருங்கி வருவதால், பூகம்பம், சுனாமி உள்ளிட்ட பேரழிவுகள் ஏற்படுமா என  தினமும் பலர் தொலைபேசி மூலம் கேட்பதாக தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். "பூகம்பமோ, சுனாமியோ ஏற்படுவதற்கு சூப்பர் மூன் எந்த வகையிலும் காரணமாக அமையாது என உறுதியாக கூறுகிறோம். எனவே, வழக்கம்போல இந்த பவுர்ணமியை சந்தோஷமாக பார்த்து ரசிக்கலாம். வழக்கத்தைவிட சந்திரன் சற்று பெரியதாக இருக்கும்.

எனினும், வழக்கமாக சந்திரன் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதை அறிந்திராத சாமானிய மக்கள் இந்த வித்தியாசத்தை உணர முடியாது" என இந்த மையத்தின் செயல் இயக்குநர் ஐயம்பெருமாள் தெரிவித்தார். "சூப்பர்மூன் காரணமாக, வெப்பநிலையில் எவ்வித மாறுதலும் ஏற்படாது. கடல் அலைகள் மற்றும் வழக்கத்துக்கு மாறாக சற்று சீற்றத்துடன் இருக்கும்" என சென்னை வானிலை மைய துணை இயக்குநர் ராஜ் தெரிவித்துள்ளார்.

ஜாவா நிரலாக்க மொழி

ஜாவா
Java Logo.svg
Paradigm:Object-oriented, structured, imperative
உருவாக்கப்பட்ட வருடம்:1990 களில்
உருவாக்கம்:சண் மைக்ரோசிஸ்டம்ஸ்
Typing discipline:Static, strong, safe, nominative
பிராதன நடைமுறைப்படுத்தல்கள்:{{{நடைமுறைப்படுத்துவோர்கள்}}}
பிறமொழித்தாக்கங்கள்:Objective-C, C++, Smalltalk, Eiffel, C#[1]
இம்மொழியினால் ஏற்பட்ட தாக்கங்கள்:C#, D, J#, PHP[verification needed], Ada 2005
இயங்குதளம்:Cross-platform
இணையத்தளம்:http://www.java.com/
ஜாவா சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் (Sun Microsystems) என்ற நிறுவனத்தினால் இணையத்தை மனதில் கொண்டு சி++ கணினி நிரலாக்க மொழியைப் பின்பற்றி உருவாக்கப் பட்ட பொருள் நோக்கு நிரலாக்க மொழி. சி, சி++ முதலிய மற்ற கணிமொழிகளின் மூல நிரல் அல்லது மூலங்கள் (Source code) இயங்குதளங்களில் இயங்குவதற்கு ஒவ்வொரு முறையும் கம்பைல் (compile) செய்யவேண்டியிருந்தது. இக்குறைபாடுகளைக் களைந்து உருவாக்கப்பட்ட ஜாவா கணினி மொழியில் இயங்குதளத்தில் Compile பண்ணியவுடன் அவை இயங்குதளங்களைச் சாராத பைட் கோட் (byte code) களாக மாற்றப்படும். இந்த பைட்கோட் நிரல்கள் இயங்குதள சார்பின்னைமை ஏற்படுத்துகின்றன. இவை (byte code) இயக்க நேரத்தில், ஜாவா மெய்நிகர் இயந்திரம் (Java Virtual Machine) என்றழைக்கப்படும், மென்பொருளினால் புரிந்துகொள்ளப்பட்டு அந்தந்த இயங்குதளங்களுக்கு ஏற்றவாறு இயக்கப்படும்.
ஜாவா மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் ஆகிய மொழிகள் பெயர் மற்றும் நடையளவில் ஒத்திருந்த போதிலும் அவை வெவ்வேறு காரணங்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட மாறுபட்ட மொழிகளாகும்.

வரலாறு

ஆரம்பகால வரலாறு

ஜாவா நிரலாக்க மொழி மற்றும் ஜாவா இயங்குசூழல் ஆகியவை சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் உட்புற செயற்றிட்டங்களாக மார்கழி 1990ல் ஆரம்பிக்கப்பட்டன. Green Project என்ற பெயரில் கலிஃபோர்னியாவின் மென்லோ பார்க் நகரில் ஆரம்பமான இத்திட்டத்தில் ஜேம்ஸ் காஸ்லிங், பாட்ரிக் நோட்டன், மைக் ஷெரிடன் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். அடுத்த தலைமுறை (next generation) வீட்டுப் பாவனைக்குரிய இலத்திரனியல் உபகரணங்களுக்கான தொழில்நுட்பத்தை வடிவமைப்பதே இவர்களுடையதும் சன் நிறுவனத்தினதுமான அப்போதைய குறிக்கோளாக இருந்தது.

இப்பணிக்காக இவர்கள் முதலில் சி++ மொழியை பாவிப்பதற்கு எண்ணியிருந்த போதிலும், பின்பு பலவித காரணங்களால் அது நிராகரிக்கப்பட்டது. அவர்கள் வளங்கள் வரையறுக்கப்பட்டதொரு உள்ளமைப்பு இயந்திரம் (embedded system) -ஐ உருவாக்க நினைத்திருந்தனர். சி++ மொழியானது ஏற்படுத்தும் நினைவகக் காற்றடங்கள்(memory footprints) இவ்வாறான இலத்திரனியல் உபகரணங்களுக்குத் தேவைக்கதிகமாகப் பெரிதானதாக இருப்பதும், சி++ மொழிக்கேயுரியதான கடினத்தன்மை மென்பொருட் பிழைகள் எற்படக் காரணமாக இருக்கும் என்பதும் இம்மொழி நிராகரிக்கப்பட முக்கியக் காரணங்களாக இருந்தது. அத்துடன் சி++ மொழியானது நினைவகச் சுத்திகரிக்கும்(garbage collection அல்லது GC) வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. இதனால் மென்பொருளாளர்கள் தாங்களே நினைவகச் சுத்திகரிப்பை ஆற்றவேண்டியிருந்தது. இது மிகக் கடினமானதும் தவறுகள் அதிகமாக எற்பட வாய்ப்புள்ளதுமான ஒரு பணியாகும். மேலும் சி++ மொழியானது மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, பரவலாக்கப்பட்ட நிரலாக்கம்(distributed programming), இயக்க இழை(threading) போன்ற வசதிகளை கொண்டிருக்காதது மட்டுமின்றி பல்வேறுபட்ட கருவிகளில் பாவிக்கத்தக்கவாறு இயங்குதள சார்பின்மையையும்(platform independence) கொண்டிருக்கவில்லை.

தனிமனித உரிமைகளின் மேம்பாட்டை முன்னெடுப்பதற்காக புரூசு சினியர் என்பவர் உருவாக்கிய சின்னம்.
தனிமனித உரிமை குழுக்களுக்கான உரிமையிலிருந்து வேறுபட்டுத் தனி மனிதர்களுக்கு உள்ள உரிமையைக் குறிக்கிறது. தனிமனித உரிமை சுதந்திரமான நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும் அனுமதி ஆகும். இயல்பு உரிமைக் கோட்பாடுகள் பொதுவாகத் தனிமனித உரிமைகளைப்பற்றியும், குழு உரிமைகள் பொதுவாக சட்ட உரிமை தொடர்பிலுமே பேசப்பட்டு வந்தபோதிலும், இயல்பு உரிமை, சட்ட உரிமை ஆகிய இரண்டும் தொடர்பான கருத்துருக்கள் தனிமனித உரிமை, குழு உரிமை என்பவற்றை வேறுபடுத்தியே கருத்தில் எடுத்துக்கொள்கின்றன.
தனிமனித உரிமைகளுக்காக வாதிடுபவர்கள், அரசுகள் தனிமனிதருடைய இயல்பு உரிமைகளைப் மறுப்பதைத் தடுப்பதற்காக கூடுதலான சட்டங்கள் ஆக்கப்படவேண்டும் எனக் கோருகின்றனர். இது தாராண்மையியத்துடன் தொடர்பானது.
மேற்கு நாடுகளில் தனிமனித உரிமை என்பது சமுதாயக் கட்டுப்பாடு என்பதுடன் தலைகீழ் விகிதத் தொடர்பு கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. அதாவது சமூகக் கட்டுப்பாடு கூடுதலாக இருக்கும்போது, தனிமனித உரிமைகள் குறைவாகக் காணப்படுகின்றன. ஆனால் சீனா போன்ற நாடுகளில் தனிமனித உரிமைகள், சமூகக் கட்டுப்பாட்டைத் திறமையாகச் செயல்படுத்த உதவுகின்றன என்ற நோக்கைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தனிமனித உரிமைகளும் அரசமைப்புச்சட்டமும்

பல நாடுகள் தமது அரசமைப்புச் சட்டங்களில், தனிமனித உரிமைகளைச் சேர்த்திருக்கின்றன. எனினும் இவை அனைத்துமே இதற்கான விதிகளை நியாயமாகச் செயல்படுத்துவது கிடையாது. பெயரளவுக்கே தனிமனித உரிமைகள் உள்ளன.
வெப்பமண்டலம்


வெப்ப மண்டல நாடான பிலிப்பெய்ன்ஸில், நற்பகலில் மரங்களின் நிழல் நேராக விழும் காட்சி

வெப்ப மண்டலம் (Tropical Zone) என்பது, ஒரு வகைப் புவியியல் பிரதேசத்தைக் குறிக்கும் சொல்லாகும். இது இலங்கையில் அயன மண்டலம் எனப்படுகிறது. இப் பகுதிகள் புவிமையக் கோட்டை மையப்படுத்தி, கடகக் கோட்டுக்கும், மகரக் கோட்டுக்கும் இடையில் இருக்கின்றன. இது வெப்ப வலயம் என்றும் அழைக்கப்படுவதுண்டு.
இப்பகுதிகள், அண்ணளவாக, 23°30'/23.5° வடக்கு, மற்றும் 23°30'/23.5° தெற்கு ஆகிய அகலக்கோடுகளிடையே கிடக்கிறது.

இந்தியாவின் தட்பவெப்ப நிலை

இந்தியா ஒரு பரந்த துணைக் கண்டமாக இருப்பதனால் இந்தியாவின் தட்பவெப்ப நிலை (Climate of India) (இந்தியாவின் தட்பவெப்பக்காலநிலை) பலதரப்பட்டதாக உள்ளது. அதனால் தட்பவெப்பக்காலநிலை இந்நாட்டு மக்களின் வேளாண் முறை, உணவு, உறைவிடம், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. மனித இனம் இன்றும் பூமி]யில் நிலைத்து இருக்கிறது என்றால் அதற்கு காரணம் பூமியில் அமைந்துள்ள சாதகமான சூழ்நிலை. காற்று[1], நீர், மண், மற்றும் வேளான்மை ஆகிய நான்கும் மனிதன் இன்னும் புவியில் உயிருடன் இருக்க காரணமான முக்கிய இயற்கை சக்திகள். தட்பவெப்பக்காலநிலையின் அங்கங்களான வெப்பநிலை, காற்று அழுத்தம், காற்று வீச்சு, ஈரப்பதம் மற்றும் மழையானது (இது நீராகவோ, உறைந்த தூவிப்பனி வீழ்வாகவோ இருக்கலாம்) இப்பூமியில் இடத்துக்கு இடம் மாறுபட்டுள்ளது. தட்பவெப்பக்காலநிலையின் அங்கங்களின் உள்ள மாறுபாடுகள் பலதரப்பட்ட தாவர வகை அல்லது செடிகொடி முளைக்கும் முறை (vegetation) அமைகிறது.

காரணிகள்

இந்தியாவின் இயற்கை அமைப்பு
இந்தியாவின் அமைவிடம், இயற்கை அமைப்பு அதாவது அதன் நிலப்பரப்பின் அமைப்பு வேறுபாடுகளாலும், வடக்கில், காஷ்மீரின் காலநிலைக்கும் தெற்கே கன்னியாகுமரியின் காலநிலைக்கும் இடையே பெரும் வேறுபாடுகள் உண்டு. வடக்கு - வடகிழக்காகப் பரவியுள்ள இமயமலை நடு ஆசியாவிலிருந்து கடுங்குளிருடன் வீசும் பனிமுனைக் காற்றினை தடுத்து நிறுத்துகின்றது. வடமேற்கேயுள்ள தார் பாலைவனத்தில் ஏற்பாடும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தெற்கிலிருந்து அதிக ஈரப்பதத்துடன் வீசும் காற்றினை இந்திய மூவலந்தீவை ( தீபகற்பத்தை) முக்கோண அமைப்பானதும் மற்றும் அதனுள் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை, ஷில்லாங் பீடபூமி திசையை மாற்றி இந்தியாவின் தெற்கு, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் மலைவிளைவு மழை (Orographic Rainfall) பொழியச்செய்கிறது. மேலும் வடக்கே நோக்கி செல்லும் இக்காற்றினை இமயமலை தடுத்து நிறுத்துகிறது. இந்தியத் தீபகற்பத்தை சுற்றியுள்ள அரபிக் கடல், இந்தியப் பெருங்கடலும், வங்காள விரிகுடாவும் கடலோரப்பகுதிகளில் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கிறது; மேலும் மழைக்காலங்களில் குளிரின் தாக்கத்தை குறைத்து இந்தியாவின் காலநிலையில் வலுவான செல்வாக்குச் செலுத்துகின்றன. இந்தியாவில் பலதரப்பட்ட கலநிலைகள் மற்றும் சிற்றிடத் தட்பவெப்பம் (Micro Climate) உள்ளதால் இங்குள்ள காலநிலைகளின் ஆய்வு என்பது ஒரு சிக்கலான தலைப்பே.

மண்டலங்கள்

இந்தியாவின் காலநிலை பிரிவுகள், (கொப்பேன் காலநிலை வகைப்பாட்டை சார்ந்தது)
     ஆல்ப் மலையத் தட்பவெப்பம் E (ETh)
     ஈரப்பத கீழ்வெப்பமண்டலம் C (Cfa)
     வறண்ட மற்றும் ஈர வெப்பமண்டலம் A (Aw)
     ஈர வெப்பமண்டலம் A (Am)
     குறைய வறண்ட நிலம் B (BSh)
     வறண்ட நிலம் B (BWh)
கடக்க ரேகை (Tropic of Cancer) இந்தியாவை இரண்டு காலநிளைப்பகுதிகளாக அதாவது வெப்பமண்டலம் (Tropical) மற்றும் கீழ்வெப்பமண்டலம் (Sub-Tropical) என்று பிரித்தாளும், இமய மலையின் தாக்கத்தால் இந்தியாவை ஒரு வெப்பமண்டலம் (Tropical) பகுதியாக கருத வேண்டும்.மேலும் இந்தியா முழுவதும் மான்சூன் மாதிரி தட்பவெப்பநிலை உள்ளது. ஆனால் வானிலையிலுள்ள மூலகங்களின் பிணைப்புகளால் இந்தியாவின் காலநிலையில் பல பிராந்திய வேறுபாடுகள் உள்ளன. இவ்வேறுபாடுகள் மான்சூன் தட்பவெப்பநிலையின் உப மாதிரிகளாக பிரதிநிதிகிக்கின்றது. இதை அடிப்படையாகக்கொண்டே காலநிலை மண்டலங்கள் அடையாளங்கண்டுபிடிக்கப்படுகிறது.
காலநிலைகளை வகைப்படுத்துவது ஒரு சிக்கலான காரியம். ஆனாலும் பல காலநிலை வள்ளுனர்களால் காலநிலை வகைப்படுத்தும் திட்டமுரைகளை நமக்கு தந்துள்ளனர் அதிலொன்று கொப்பெனின் காலநிலை வகைப்படுத்தும் திட்டமுறை. கொப்பெனின் திட்டமுறை மாதாந்திர தட்பவெப்பம் மற்றும் மழையளவை அடிப்படையாக கொண்டு காலநிலை மண்டலங்களை வகைப்படுத்தியுள்ளது (Köppen climate classification system). கொப்பெனின் காலநிலை வகைப்படுத்தும் திட்டமுறைப்படி இந்தியாவில் ஐந்து முக்கிய காலநிலை மண்டலங்கள் உள்ளன. அவை,
  1. வெப்பமண்டல காலநிலை (Tropical Climate)
  2. வரண்ட காலநிலை (Dry Climate)
  3. குறை மித வெப்பமண்டல காலநிலை (Warm Temperate Climate)
  4. குளிர்ந்த மித வெப்பமண்டல காலநிலை (Cool Temperate Climate)
  5. துர்வ காலநிலை (Ice/Polar Climate)

பருவங்களின் தாளலயம்

ஒரு வருடத்திற்கு இந்தியாவில் நான்கு காலநிலைப் பருவங்களை வளி மண்டல ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுகொள்ளபட்டுள்ளது. அவை,
  1. குளிர் காலம்
  2. கோடைக்காலம்
  3. தென்மேற்கு பருவப்பெயற்சிக் காற்று மழைக் காலம்
  4. வடகிழக்குப் பருவப்பெயற்சிக் காற்று மழைக் காலம்
விடலைப் பருவம்       
விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வளர்ந்தோருக்கும் இடைப்பட்ட ஒரு மாறுநிலைக் கட்டமாகும். இப் பருவத்துக்கான வயதெல்லை எல்லாப் பண்பாடுகளிலும் ஒரே அளவாகக் கருதப்படுவதில்லை. பல காலமாகவே பருவமடைதல் என்பது விடலைப் பருவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு வந்துள்ளது. அண்மைக் காலங்களில் பருவமடைதல் காலம் விடலைப் 
விடலைப் பருவப் பெண்கள்.
 பருவத்துக்கு முன்னதாகவே தொடங்கி விடலைப் பருவத்துக்கு அப்பாலும் போவதைக் காணக்கூடியதாக உள்ளது. உலக சுகாதார நிறுவனம் விடலைப் பருவத்தை 10 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட காலம் என வரையறை செய்துள்ளது.

பயன்பாடு

சமூகவியலில், விடலைப் பருவம் என்பது, ஒரு பண்பாட்டுத் தோற்றப்பாடாகவே கருதப்படுகிறது. இதனால் இதன் தொடக்கமும் முடிவும் உடல்ரீதியான எல்லைகளுடன் தொடர்புபடுத்தப்படுவது கடினமாக உள்ளது. இப்பருவம் சிறுவர் வளர்ந்தவர்களாக மாறும் ஒரு காலகட்டமாக அமைகிறது. இம் மாற்றம், உயிரியல், சமூகவியல் மற்றும் உளவியல் சார்பான மாற்றங்களை உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் உயிரியல் மாற்றங்களும், உளவியல் மாற்றங்களுமே இலகுவாக அளவிடப்படக் கூடியவையாகும்.

இளமை

விடலைப் பருவத்துக்கு பின்னர் வரும் பருவம் இளமை ஆகும். பொதுவாக 18 - 24 அல்லது 29 வயதுவரை இளமைப் பருவம் எனப்படுகிறது. இவர்களை இளையோர் அல்லது வாலிபர் என்பர்.

பிற பருவத்துனருடன் ஒப்பிடுகையில் இளயோரிடம் குறிப்பிடத்தக்க சில பண்பியல்புகள் உண்டு. இளைய பருவம் மாற்றத்தை இலகுவில் ஏற்று தன்னை மாற்றியமைத்துக்கொள்ள கூடியது, துணிவு மிக்கது, செயற்பாட்டை முதன்மைப் படுத்துவது. இப்பருவத்தில் பாலியல் கவர்ச்சியும் ஈடுபாடும் அதிகம் இருக்கும்.

இளையோரை பெரும் சதவீதமாக கொண்ட ஒரு சமூகம் வன்முறைப் போக்கு எடுப்பதற்கு கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு(ஆதாரம் தேவை). அனேக நாடுகளில் இளையோரே அதிகம் வேலையற்றோராக இருக்கின்றார்கள்.

முதுமையடைதல்

Elder.jpg
மனித வாழ் நாளின் இறுதி ஆண்டுகளை முதுமை என்கிறோம். ஏறத்தாழ 60 வயதுக்கு மேற்பட்டோரை முதியவர் என்பர். இளம்பருவத்தில் இருந்து படிபடியாக மனிதர் முதுமைப்படுவர். இன்றுவரை, முதுமை வாழ்வின் மாற்ற முடியா ஒரு பகுதியாகவே இருக்கின்றது.
முதுமையும் சாவுமே மனிதன் சந்திக்கும் தவிர்க்கமுடியா மிக மோசமான கொடுமையாக பலராலும் பாக்கப்படுகிறது. ஆகையால், இயன்றவரை வாழ்நாளை கூட்ட பல்வேறு ஆய்வுகளும் திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும் இதுவரை முதுமைப்படுதலை தடுக்க பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட எந்த வழிமுறையும் இல்லை.[1]

முதுமையின் வெளிப்பாடு

முதுமைப்படுதலால் உடலின் செயல்பாடு குன்றும். திசுச் சீர்கேடு, தோல் சுருக்கம், தசை எடை குறைவு, புலன் குறைபாடு, நரம்பு மண்டலத் தளர்ச்சி, உடல் அசைவுத் தன்மைக் குறைவு, இனப்பெருக்கத் தடை, உளவியல் பாதிப்புகள் என பல்வேறு முறைகளில் உடல் தொழிற்பாடும் நலமும் குன்றும். மேலும் உடல் பல்வேறு நோய்களுக்கும் உட்படும். இதய நோய், பக்கவாதம், மூட்டுவலி, புற்று நோய், நீரிழிவு நோய் போன்றவை பெரிதும் முதுமைப்படுத்லின் காரணமாகவே ஏற்படுகிறது.

வாழ்நாள் எதிர்பார்ப்பு கூடலும் மாறாத மிக கூடிய வாழ்நாளும்

Elder 2.jpg
வாழ்நாள் எதிர்பார்ப்பு என்பது ஒரு உயிரினத்தின் சராசரி வாழும் காலத்தைக் குறிக்கும். சத்துணவு, நலவாழ்வு, மருத்துவம் ஆகிவற்றிலேயே வாழ்நாள் எதிர்பார்ப்பு பெரும்பாலும் தங்கி இருக்கிறது. சுமூக அரசியல் சூழலும் பொருளாதார வளர்ச்சியும் வாழ்நாள் எதிர்பார்ப்பைக் கூட்டும் காரணிகளை ஏதுவாக்கத் தேவை. இத்தகைய சூழலைப் பொறுத்து சுவாசிலாந்தில் 32.6 ஆண்டுகள் தொடங்கி, யப்பானில் 81 ஆண்டுகள் வரை என வாழ்நாள் எதிர்பார்ப்பு வேறுபடுகிறது. [2] பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளைத் தவிர்த்து பெரும்பாலான நாடுகளில் வாழ்நாள் எதிர்பார்ப்பு கூடியே வருகிறது. இடைக்காலத்தில் 35 வயதுக்குட்பட்டே வாழ்நாள் எதிர்பாப்பு இருந்தது, இன்று இது இரண்டு மடங்காக கூடி உள்ளது[3].
இருப்பினும் பதியப்பட்ட மனித வரலாற்றில் யாரும் 123 வயதுக்கு மேல் இருந்ததாக ஆதாரம் இல்லை[4]. மிகக் குறைவான எண்ணிக்கையிலான மனிதர்களே 100 வயதுக்கு மேலே வாழக்கூடியதாக இருக்கின்றது. மனிதனின் சராசரி வாழ்நாள் கூடி வந்திருப்பினும், மிக கூடிய வாழ்நாள் கூடவில்லை. இதற்கு உயிரியல் அடிப்படையிலான எல்லைகள் இருக்கலாம். இருப்பினும், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி இந்த எல்லை நீடிக்கப்படக்கூடியதே.

முதுமை பற்றிய கோட்பாடுகள்

நாம் ஏன் முதுமை அடைகிறோம் என்பது பற்றி பல கோட்பாடுகள் இருக்கின்றன. இவை தனித்தனியே முழு விளக்கத்தையும் தருவதில்லை.

படிவளர்ச்சி முதுமைக் கோட்பாடு (Evolutionary Theory)

மனிதரின் படிவளர்ச்சியை பேணவே மனிதர் முதுமை பெற்று இறக்கின்றனர் என்பதே படிவளர்ச்சிக் கோட்பாட்டின் சாரம். இந்தக் கோட்பாட்டைப் பற்றி Theodore. C. Goldsmith Theories of Biologcal Aging [5] என்ற ஆய்வறிக்கையில் விளக்கம் காணலாம்.
காலம் செல்ல செல்ல ஒரு உயிரினத்துக்கு இயற்கையால் ஏற்படுத்தும் அச்சுறுத்தல் கூடுகின்றது. எடுத்துக்காட்டாக உயிரினம் விபத்துகுள்ளாகும் வாய்ப்பு கூடுகின்றது. இதனால் ஒரு உயிரினம் தனது உடல் வளங்களை இளம்பருவத்தில் குவியப்படுத்துகின்றது. குறிப்பாக உயிர் உற்பத்தித் திறன் இளவயதிலேயே வீரியமாக இருக்கிறது. இதனால் நாட்கள் செல்ல செல்ல உடல் வலு இழந்து, உயிர் துறக்கிறது.
மேலும், யாரும் இறக்காவிட்டால், உயிரினங்களின் தொகைகூடி பெரும் அழிவுக்கு இட்டுச் செல்லலாம். மாறிவரும் சூழலுக்கு முதிய உயிரினங்கள் தாக்குப்பிடிப்பது கடினமாக இருக்கும். முதிய உயிரினங்களே இருந்தால் அவற்றின் குடிவழிகளே மக்கள் தொகையில் கூடுதலாக இருக்கும். இது இனப் பெருக்கத்துக்கும் படிவளர்ச்சிக்கும் உகந்தது அல்ல.

மரபணு முதுமைக் கோட்பாடு (The Genetic Theory of Aging)

மரபணுக்களாலேயே வாழ்நாள் பெரிதும் முடிவாவதாக மரபணுக் கோட்பாடு கூறுகிறது. அதாவது, பிறக்கும்போதே ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் மரபணுக்களைக் கொண்டு வாழ்நாள் முடிவாகிறது.
பெற்றோர்கள் நீண்ட வாழ்நாளைக் கொண்டால் பிள்ளைகளும் நீண்ட காலம் வாழ்வதை அவதானிக்க முடியும். மேலும் இரட்டை மனிதர்களின் வாழ்நாள் உடன் பிறந்தவர்களை விட ஒரே கால அளவைக் கொண்டதாக இருக்கும். இவை மரபணுக் கோட்பாட்டுக்கு ஆதாரங்களாக கொள்ளப்படுகின்றன.

Cellular Senescence கோட்பாடு

முதுமைக்கு ஒரு விளக்கம் Cellular Senescence theory. தற்போது இருக்கும் தகவல்களின் படி உடலில் இருக்கும் கலன்கள் எழுந்த மானமாக ஆக அல்லது தம்மைப் படி எடுக்கும் பொழுது சிறு பிழைகள் விட வாய்ப்பு உண்டு. அந்த பிழைகள் நாளடைவில் சேர்ந்து உடலை வலு இழக்கச் செய்கின்றன. இவை தம்மைப் புதிப்பிக்கும் அல்லது படி எடுக்கும் முறை நாளடைவில் சீர் குறைந்து, இறுதியாக சாவுக்கு இட்டுச்செல்கிறது.

Free Radical Theory of Aging

கலன்கள் ஆற்றலை உற்பத்தி செய்யும்பொழுது நிலையற்ற உயிர்வளி மூலக்கூறுக்களையும் (oxygen molecules) உற்பத்தி செய்கின்றன. இந்த நிலையற்ற மூலக்கூறுகளை free radicals என்பர். இந்த நிலையற்ற மூலக்கூறுகளில் ஒரு இலத்திரன் மேலதிகமாக இருக்கும். இவை பிற மூலக்கூறுகளிலும் சேர்ந்து, அவற்றை முறையாக இயங்க விடுவதில்லை. Damage to DNA, protein cross-linking போன்றவற்றுக்கு இதுவே காரணம். காலப்போக்கில் இத்தகைய தவறுகள் குவிந்து முதுமைக்கு காரணமாகின்றன.