Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

பாலியற் கல்வி எனப்படுவது பால் தன்மை, இனப்பெருக்கம், பாலுறவு, கருத்தடைச் சாதனங்கள் மற்றும் ஏனைய மனித பாலியல் நடத்தைகள் பற்றியதான கல்வியாகும்.
பாலியற் கல்வி தேவையா என்பது பற்றிய சர்ச்சைகள் பரவலாக காணப்படுகிறதெனினும் அது ஓரளவுக்கேனும் பாடசாலைக் பாடத்த்திட்டத்தில் காணப்படுகிறது. எயிட்சின் தீவிர பரவல் பாலியற்கல்வியின் தேவையை அதிகரித்துள்ளது. ஆயினும் எந்த வயதில் பாலியற் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதிலும் எத்தகைய விடயங்கள் கற்பிக்கப்படலாம் என்பதிலும் சர்ச்சைகள் தொடர்கின்றன.

ஆண் விடலை அறிந்திருக்க வேண்டியவை

  • தானாகவே வரும் விறப்புத்தன்மை
  • விந்து 

இளம் பெண் அறிந்துருக்க வேண்டியவை

  • மாதவிலக்கு, சரியாக தூய்மை செய்து கொள்ளும் முறை, அதன் பயமும் உடல் பலவீனமும்
மார்பக வளர்ச்சி
  • கருத்தரிக்கும் முறை, பாதுகாப்பு
பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரிக்குச் செல்லும் பொழுது அவர்கள் விரும்பும் துறையில் கல்வி கற்க முடிகிறது. இந்தக் கல்லூரிப் படிப்பில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பட்டம் அளிக்கப்படுகிறது. இந்தப் பட்டங்கள் அந்தக் கல்லூரி இணைக்கப்பட்டுள்ள பல்கலைக் கழகங்களால்வழியாக அளிக்கப்படுகிறது. பல்கலைக் கழகங்கள் அளிக்கும் பட்டங்கள் முக்கியமாக ஐந்து நிலையில் உள்ளது.
  1. இளம்நிலைப் பட்டம்
  2. முதுநிலைப் பட்டம்
  3. ஆய்வியல் நிறைஞர் பட்டம்
  4. முனைவர் பட்டம்
  5. மதிப்புறு முனைவர் பட்டம்

இளம்நிலைப் பட்டம்

பள்ளிப் படிப்பை நிறைவு செய்தவர்கள் கல்லூரிக்குச் சென்று முதலில் படித்துத் தேர்ச்சி அடையும் படிப்புகளுக்கு இளம்நிலைப் பட்டம் அளிக்கப்படுகிறது. இவை அவர்கள் படித்துத் தேர்ச்சி அடைந்த பாடங்களின் துறைப் பெயரைப் பின்னால் இணைத்து வழங்கப்பட்டு வருகிறது.
  • கலைப் பாடங்கள் - இளங்கலைப் பட்டம்
  • அறிவியல் பாடங்கள் - இளம் அறிவியல் பட்டம்
  • மருத்துவம் - இளம்நிலை மருத்துவம் பட்டம்
  • பொறியியல் - இளம்நிலை பொறியியல் பட்டம்
  • கால்நடை பராமரிப்பு - இளம்நிலை கால்நடை அறிவியல் பட்டம்
  • விவசாயம் - இளம்நிலை விவசாயம் பட்டம்
  • மீன் வளம் - இளம்நிலை மீன் வளர்ப்பு அறிவியல் பட்டம்
  • விளையாட்டு - இளம்நிலை உடற்பயிற்சிக் கல்வி பட்டம்
- இதுபோன்று ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக இளம்நிலைப் பட்டங்கள் அளிக்கப்படுகின்றன.

முதுநிலைப் பட்டம்

கல்லூரிப்படிப்பில் இளம்நிலைப் பட்டம் முடித்து மேற்படிப்பு படிப்பவர்கள் அந்நிலையில் தேர்ச்சி அடையும் போது முதுநிலை பட்டம் அளிக்கப்படுகிறது. இவையும் அவர்கள் படித்துத் தேர்ச்சி அடைந்த பாடங்களின் துறைப் பெயரைப் பின்னால் இணைத்தே வழங்கப்பட்டு வருகிறது.
  • கலைப் பாடங்கள் - முதுகலைப் பட்டம்
  • அறிவியல் பாடங்கள் - முதுநிலை அறிவியல் பட்டம்
  • மருத்துவம் - முதுநிலை மருத்துவம் பட்டம்
  • பொறியியல் - முதுநிலைப் பொறியியல் பட்டம்
  • கால்நடை பராமரிப்பு - முதுநிலை கால்நடை அறிவியல்
  • விவசாயம் - முதுநிலை விவசாயம்
  • மீன் வளம் - முதுநிலை மீன் வளர்ப்பு அறிவியல்
  • விளையாட்டு - முதுநிலை உடற்பயிற்சிக் கல்வி
- இதுபோன்று ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக முதுநிலைப் பட்டங்கள் அளிக்கப்படுகின்றன.

ஆய்வியல் நிறைஞர் பட்டம்

ஒவ்வொரு துறையிலும் முதல்நிலை ஆய்வுப் படிப்புகளில் சேர்ந்து அதில் தேர்ச்சி அடையும் போது ஆய்வியல் நிறைஞர் பட்டம் அளிக்கப்படுகிறது. இந்த ஆய்வியல் நிறைஞர் பட்டம் இளம் முனைவர் என்றும் சிலரால் குறிப்பிடப்படுகிறது.

முனைவர் பட்டம்

ஒவ்வொரு துறையிலும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் அதற்கு மேல்நிலைப் படிப்பாக முனைவர் படிப்பில் சேர்ந்து தேர்ச்சி அடையும் நிலையில் அவருக்கு முனைவர் பட்டம் அளிக்கப்படுகிறது. இப்படிப்புகளுக்கு ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெறாமல் முதுகலைப் பட்டம் பெற்று நேரடியாகச் சேரும் வாய்ப்பும் உள்ளது.

மதிப்புறு முனைவர்

ஒவ்வொரு துறையிலும் முனைவர் பட்டம் பெற்றவர் மேலும் அத்துறையில் விரிவான ஆய்வு செய்து அதில் வெற்றி பெறும் நிலையில் அவர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் அளிக்கப்படுகிறது.
இந்தியப் பல்கலைக்கழகங்களில் வானியல், வானியற்பியலில் செயலார்ந்த குழுக்களை உருவாக்கவும் வளர்க்கவும் பல்கலைக்கழக மானியக் குழுவினால் தொடங்கப்பட்ட ஒரு தன்னாட்சி நிறுவனமே பல்கலைக்கழகங்களுக்கான வானியல், வானியற்பியல் மையம் (Inter University Centre for Astronomy and Astrophysics - IUCAA - ஐயூக்கா ); இது பூனாவிலுள்ளது. பல்கலைக்கழகங்களிடையில் வானியல்-வானியற்பியல் கற்பித்தல், ஆராய்ச்சி, வளர்ச்சி ஆகிய துறைகளில் தலைசிறந்த மையமாக இருப்பதே ஐயூக்காவின் நோக்கமாகும்.
தமிழ்நாட்டிலுள்ள இடைநிலை ஆசிரியருக்கான பயிற்சிப் பள்ளிகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை
  1. மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம்
  2. அரசு இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்
  3. அரசு அங்கீகாரம் பெற்ற அரசு உதவி பெறும் தனியார் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள்
  4. சுயநிதி இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள்

மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம்

தமிழ்நாட்டில் மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சிப் பள்ளிகள் இருக்கும் ஊர், மாவட்டம் குறித்த பட்டியல் இது.
  1. திருவல்லிகேணி, சென்னை
  2. திரூர், திருவள்ளூர் மாவட்டம்.
  3. காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்.
  4. ராணிபேட்டை, வேலூர் மாவட்டம்.
  5. கீழ்ப்பெண்ணாத்தூர், திருவண்ணாமலை மாவட்டம்.
  6. ஜி.அரியூர், விழுப்புரம் மாவட்டம்.
  7. வடலூர், கடலூர் மாவட்டம்.
  8. குருகத்தி, நாகப்பட்டினம் மாவட்டம்.
  9. மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்.
  10. ஆடுதுறை, தஞ்சாவூர் மாவட்டம்.
  11. புதுக்கோட்டை,புதுக்கோட்டை மாவட்டம்.
  12. லால்குடி, திருச்சி மாவட்டம்.
  13. பெரம்பலூர்,பெரம்பலூர் மாவட்டம்.
  14. மாயனூர், கரூர் மாவட்டம்.
  15. நாமக்கல்,நாமக்கல் மாவட்டம்.
  16. உத்தமசோழபுரம், சேலம் மாவட்டம்.
  17. கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டம்.
  18. பெருந்துறை, ஈரோடு மாவட்டம்.
  19. திருமூர்த்தி நகர்,கோயம்புத்தூர் மாவட்டம்.
  20. கோத்தகிரி, நீலகிரி மாவட்டம்.
  21. ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மாவட்டம்.
  22. காளையார்கோவில், சிவகங்கை மாவட்டம்.
  23. மஞ்சூர், ராமநாதபுரம் மாவட்டம்.
  24. தே.கல்லுப்பட்டி, மதுரை மாவட்டம்.
  25. பாலையம்பட்டி, விருதுநகர் மாவட்டம்.
  26. உத்தமபாளையம், தேனி மாவட்டம்.
  27. முனைஞ்சிப்பட்டி, திருநெல்வேலி மாவட்டம்.
  28. வானரமூட்டி, தூத்துக்குடி மாவட்டம்.
  29. தேரூர், கன்னியாகுமரி மாவட்டம்.

அரசு இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் அரசு இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் கீழ்க்காணும் இடங்களில் உள்ளன.
  1. இராயப்பேட்டை (மகளிர்) சென்னை.
  2. இராணிப்பேட்டை (மகளிர்) வேலூர்
  3. சமூகரங்கபுரம், திருநெல்வேலி மாவட்டம்.
  4. ஜோகில்பட்டி, விருதுநகர் மாவட்டம்.
  5. கங்கவல்லி, சேலம் மாவட்டம்.
  6. சின்னதாராபுரம், கரூர் மாவட்டம்.
  7. தாயார்சாகிப்தெரு, சென்னை-2 (உருது)
  8. தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம்
  9. கோயம்புத்தூர், கோயம்புத்தூர் மாவட்டம்

அரசு அங்கீகாரம் பெற்ற அரசு உதவி பெறும் தனியார் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள்

தமிழ்நாடு அரசின் உதவி பெறும் தனியார் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் பட்டியல் இது.
  1. அவ்வை ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, சென்னை. ( பெண்களுக்கானது)
  2. புனித கிறிஸ்டோபர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, வேப்பேரி, சென்னை. (பெண்களுக்கானது)
  3. புனித அன்னம்மாள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, மாதவரம், சென்னை(பெண்கள்)
  4. ஞானோதய ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, புனித தாமஸ்மலை, சென்னை. பெண்களுக்கானது
  5. மேரி இமாகுலேட் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, திருப்பத்தூர். பெண்களுக்கானது
  6. கன்கார்டியா ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, ஆம்பூர். ஆண்களுக்கானது.
  7. யூனியன் மிஷன் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, விருதம்பட்டு. ஆண்களுக்கானது.
  8. பீட்டி ஆசிரியர் பயிற்சிப்பள்ளி,ராணிப்பேட்டை. பெண்களுக்கானது
  9. புனித மேரி ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, அன்மருதை, திருவண்ணாமலை. பெண்களுக்கானது
  10. ஆர்.சி. ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, திண்டிவனம். ஆண்களுக்கானது.
  11. தூய இருதய ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, கடலூர். பெண்களுக்கானது
  12. சேவா மந்திர் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, பரங்கிப்பேட்டை. பெண்களுக்கானது
  13. டி,இ.எல்.சி. ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, தரங்கம்பாடி. ஆண்களுக்கானது.
  14. புனித தெரஸா ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, தரங்கம்பாடி. பெண்களுக்கானது
  15. புனித ஜோசப் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, மன்னார்குடி. பெண்களுக்கானது
  16. பெரியார் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, திருச்சி. ஆண்களுக்கானது.
  17. நாகம்மை ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, திருச்சி. பெண்களுக்கானது
  18. ஆர்.சி. ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, திருச்சி. ஆண்களுக்கானது.
  19. புனித ஏஞ்சலா ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, பொன்மலைப்பட்டி, திருச்சி. பெண்களுக்கானது
  20. டி.எம். அன்ட் ஆர் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, திருமங்கலம், மதுரை. பெண்களுக்கானது
  21. டி.இ.எல்.சி ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, உசிலம்பட்டி. (பெண்களுக்கானது)
  22. புனித தெரசா ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, மதுரை. (பெண்களுக்கானது)
  23. சாங்ட்டா பாத்திமா ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, திண்டுக்கல். (பெண்களுக்கானது)
  24. வியாகுல அன்னை ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, திண்டுக்கல். (பெண்களுக்கானது
  25. புனித மைக்கேல் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, பழனி. (பெண்களுக்கானது)
  26. சி.எஸ்.ஐ. ஆசிரியர் பயிற்சிப்பள்ளி,வத்தலக்குண்டு. (ஆண்களுக்கானது)
  27. ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி,கோவை. (ஆண்களுக்கானது)
  28. புனித மேரி ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, கருமாதம்பட்டி, கோவை. (பெண்களுக்கானது)
  29. பெத்லஉறம் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, உதகை. (பெண்களுக்கானது)
  30. புனித ஜோசப் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, பகல்பட்டி, சேலம். (பெண்களுக்கானது)
  31. சி.எஸ்.ஐ. ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, உறஸ்தம்பட்டி, சேலம். (பெண்களுக்கானது)
  32. என்.ஆர்.தாஸ் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, வடமலாபுரம், விருதுநகர். (ஆண்களுக்கானது)
  33. புனித ஸ்தனிஸ்லாஸ் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, சாத்தூர். (ஆண்களுக்கானது)
  34. கிறிஸ்து ராஜா ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, பாளையங்கோட்டை. (ஆண்களுக்கானது)
  35. பிஷப் சார்ஜென்ட் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, பாளையங்கோட்டை. (ஆண்களுக்கானது)
  36. ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, பழையகோட்டை, திருநெல்வேலி.(பெண்களுக்கானது)
  37. சாரா டக்கர் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, பாளையங்கோட்டை. (பெண்களுக்கானது)
  38. வள்ளியம்மையார் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, குலசேகரப்பட்டினம், தூத்துக்குடி.(பெண்களுக்கானது)
  39. புனித ஜான் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, நாசரேத், தூத்துக்குடி. (பெண்களுக்கானது)
  40. புனித அன்னம்மாள் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, அடைக்கலாபுரம், தூத்துக்குடி.(பெண்களுக்கானது)
  41. டி.வி.டி. ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, கோட்டார், கன்னியாகுமரி. (ஆண்களுக்கானது)
  42. குழந்தை இயேசு ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, மூளகுமுடு, கன்னியாகுமரி. (பெண்களுக்கானது)
  43. ஆங்கிலோ இந்திய ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, சர்ச் பார்க், சென்னை. (பெண்களுக்கானது)-ஆங்கில வழி கல்வி

சுயநிதி இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள்

தமிழ்நாட்டில் தனியார் அமைப்பு, சங்கம் போன்றவற்றின் நிதியில் இயங்கும் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் உள்ளன.
சென்னை அடையாறு பகுதியில் அரசு திரைப்படக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரியில் நடிப்புப் பயிற்சி அளிக்கப்படுவதுடன் அதற்கான தேர்வுக்குப் பின்பு நடிப்பிற்கான சான்றிதழ் அளிக்கப்படுகிறது. மேலும் கதை , ஒளிப்பதிவு , ஒலிப்பதிவு , இயக்கம் போன்ற திரைப்படம் சார்ந்த சில பிரிவுகளின் கீழ் பயிற்சிகள் அளிக்கப்பட்டு தேர்ச்சியடையும் மாணவர்களுக்கு குறிப்பிட்ட பிரிவுகளின் கீழாக திரைப்படத் தொழில்நுட்பப் பட்டயச் சான்றிதழ் (Diploma in Film Technology - D.F.T) அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் பட்டியல்

தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல் இது.

மாநிலப் பல்கலைக்கழகங்கள்

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள இப்பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மாநிலப் பல்கலைக்கழகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இணைய முகவரி:
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக இணைய தளம்
இணைய முகவரி:
அழகப்பா பல்கலைக்கழக இணைய தளம்
இணைய முகவரி:
அண்ணா பல்கலைக்கழக இணைய தளம்
இணைய முகவரி:
அண்ணா பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் இணைய தளம்
இணைய முகவரி:
அண்ணா பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி இணைய தளம்
இணைய முகவரி:
[http:// அண்ணா பல்கலைகழகம், திருநெல்வேலி இணைய தளம்]
இணைய முகவரி:
அண்ணாமலை பல்கலைக்கழக இணைய தளம்
இணைய முகவரி:
சென்னைப் பல்கலைக்கழக இணைய தளம்
இணைய முகவரி:
பாரதியார் பல்கலைக்கழக இணைய தளம்
இணைய முகவரி:
பாரதிதாசன் பல்கலைக்கழக இணைய தளம்
இணைய முகவரி:
மதுரை காமராசர் பல்கலைக்கழக இணைய தளம்
இணைய முகவரி:
மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக இணைய தளம்
இணைய முகவரி:
பெரியார் பல்கலைக்கழக இணைய தளம்
இணைய முகவரி:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இணைய தளம்
இணைய முகவரி:
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணைய தளம்
இணைய முகவரி:
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக இணைய தளம்
இணைய முகவரி:
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக இணைய தளம்
இணைய முகவரி:
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக இணைய தளம்
இணைய முகவரி:
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக இணைய தளம்
இணைய முகவரி:
இணைய முகவரி:
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணையதளம்
இணைய முகவரி:
தமிழ்ப் பல்கலைக்கழக இணைய தளம்
இணைய முகவரி:
இணைய முகவரி:
திருவள்ளுவர் பல்கலைக்கழக இணைய தளம்

கருத்தடை

கருத்தடை என்பது ஒரு பெண் கர்ப்பமடைவதை செயற்பாடுகள், சாதனங்கள், மருந்துகள் மூலம் தடுத்தலாகும். குடும்பக் கட்டுப்பாட்டில் கருத்தடை முக்கிய பங்கு வகிக்கிறது. பல மதங்கள், கலாசாரங்கள் கருத்தடை தொடர்பில் எதிர்ப்புணர்வு கொண்டுள்ளன. இருப்பினும் கருக்கலைப்புடன் ஒப்பிடுகையில் கருத்தடைக்கான எதிர்ப்பு குறைவானதாகவே உள்ளது.

கருத்தடைச் செயல்கள்

  1. விந்து வெளியேற்றத்தின் முன்னர் ஆண்குறியை புணர்புழையிலிருந்து வெளியே எடுத்தல் பன்னெடுங்காலமாகப் பயன்படும் கருத்தடை முறையாகும்.[1]
  2. மாதவிடாய் சுழற்சியில் சில குறிப்பிட்ட நிலைகளில் மட்டும் உடலுறவு கொள்ளுதல் மற்றொரு கருத்தடை முறையாகும்.
இருப்பினும் இம்முறைகள் உறுதியாக கருவுறுதலைத் தவிர்க்க உதவும் என்று கூற முடியாது.

இயற்கை முறைகள்

நாள் கணக்கு வைக்கும் (காலண்டர்) முறை

இந்த முறைப்படி, மாதவிடாய் முடிந்த 10 நாட்களுக்குப் பின் கருமுட்டை வளர்ச்சி அடைவதால், அவ்வளர்ச்சி பருவத்தில், உடலுறவை தவிர்த்தால் கருத்தரிப்பையும் தவிர்க்க இயலும். ஆகவே பாதுகாப்பான காலம், மாதவிடாய்க்கு ஒரு வாரம் முன்பும் பின்பும் ஆகும். இந்த முறையில், பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. ஆனால் இதில் மாறுபடும் சுழற்சி உள்ளவர்களுக்கு, இந்த முறையில் தோல்விகள் ஏற்பட்டு கருத்தரிக்க வாய்ப்புள்ளது.

பில்லிங்ஸ் முறை

பெரும்பாலான பெண்களுக்கு பெண் உறுப்பிலிருந்து திரவம் சுரப்பது காணப்படும். இது அளவிலும் நிறத்திலும் அடர்த்தியிலும் ஒருவருக்கொருவர் மாறுபடும். இது மாதவிடாய் காலச் சுழற்சியைப் பொறுத்து மாறுபடும். சில நேரங்களில் வெள்ளை நிறத்தில் ஒட்டுகின்ற தன்மையுடன் காணப்படும். மாதவிடாய் முடிந்தவுடன், இது சற்று குறைந்த அளவில், வறண்டும், கெட்டியாகவும், வெள்ளை நிறத்திலும் இருக்கும். இதன் வழுவழுப்பு தன்மை கருமுட்டை வளர்ச்சி அடைந்த நிலையில் அதிகமாக இருக்கும். இது கருத்தரிப்பதற்கான நாட்களின் அறிகுறியாகும். இந்த மாறுபாடுகளைக் கவனிக்கும் போது பெண்கள் கருத்தரிக்கும் நாட்களையும் கருத்தரிக்காத நாட்களையும் அறிந்துகொள்ள இயலும்.

உடலில் வெட்ப மாறுபாடு

பெண்கள் உடலில் வெப்பம் கூடுவதையும் குறைவதையும் காலையில் படுக்கையிலிருந்து எழும்பும் நேரத்தில் கண்காணிக்க வேண்டும். முக்கியமாக மாதத்தில் நடுப்பகுதியில் கண்காணித்திட வேண்டும். அக்காலகட்டத்தில் கருமுட்டை வளர்ச்சி அடையும் போது, உடலின் வெப்பநிலை 1-2 டிகிரி பாரனைட் அதிகமாக இருக்கும். இந்தக் காலக்கட்டத்தில் (1-16 நாட்கள்) உடலுறவை தவிர்ப்பதன் மூலம் கருத்தரிப்பை தவிர்க்கலாம். ஆனால் வெப்பநிலையைத் தெரிந்து கொள்ள தினமும் நேரம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

தடுப்பு முறைகள்

தற்போது பெண்ணின் கரு முட்டையுடன் ஆணின் கரு அணு இணைவதைத் தடுக்கும் பல முறைகள் பயன்பாட்டில் உள்ளன.

ஆண் கருத்தடை சாதனம்

ஆணுறை (சுற்றப்பட்ட நிலையில்).
ஆண் அணியும் ஆணுறையை உடலுறவிற்கு முன்பு அணிந்து கொள்வதன் மூலம், கரு அணு கர்பப்பபையில் கரு முட்டையுடன் இணைவதைத் தடுத்து கருத்தரிப்பை தவிர்க்க உதவுகிறது. இந்த ஆணுறையை ஒரு முறை உபயோகித்த பின் மீண்டும் உபயோகிக்கக் கூடாது. இது மிகச்சிறந்த கருத்தடை சாதனமாக செயல்படுவதுடன் எய்ட்ஸ் மற்றும் உடலுறவு சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் பாதுகாக்கவும் உதவுகிறது.

பெண் கருத்தடை சாதனம்

பெண்களுக்கான கருத்தடைக்குப் பல சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ரிங் கருத்தடை சாதனம்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்களுக்கான கருத்தடை சாதனம் 2-4 அங்குல வட்டவடிவில் ஒரு வளையமாக இணைக்கப்பட்ட பொருளாகும். இதை ஆரம்பக்கட்டத்தில் ஒரு மருத்துவரின் அல்லது ஒரு மருத்துவ ஊழியரின் உதவியுடன் பொருத்திக் கொள்ள பழகி விட்டால் பின் சுயமாகவே பெண் உடலுறுப்பில் பொறுத்திக் கொள்ள இயலும். இதை அணிவதன் மூலம் கரு அணு கரு முட்டை இணைவதை தடுத்து கருதரிப்பைத் தவிர்க்கிறது. ஒரு முறை உபயோகித்தப்பின் அதை சோப்பு போட்டு சுத்தப்படுத்தி மீண்டும் அடுத்த முறை உபயோகம் செய்யலாம். இதன் விலை சற்றே அதிகமானாலும் பெண்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பெண்களுக்கு சாதகமான ஒன்றாக உள்ளது.

கருப்பைவாய் இடைவெளி

இது மென்சவ்வு போன்றே கருப்பை வாய்ப் பகுதியில் பொருத்திக் கொள்ள கூடிய ஒரு ரப்பர் மூடி. இதை அணிந்து கொள்வதன் மூலம் கருப்பை வாய் மூடப்படுவதால் கருத்தரிப்பு நிகழ்வு தடைப்படுகிறது.

கருத்தடைப் பொருள்

பெண்களுக்கான இந்த கருத்தடைப் பொருள், பாலியுரித்தனால் செய்யப்பட்ட மெதுவான, பெண்களின் உடலுறுப்பில் பொருத்திக் கொள்ளக் கூடிய வசதியுடன் உள்ள ஒன்றாகும். உடலுறவிற்கு முன்பே இதை பொருத்திக் கொள்வதன் மூலம் கரு அணு கரு முட்டையுடன் இணைவதை தவிர்க்கிறது. இது கருத்தரிப்பை தவிர்ப்பதுடன், எய்ட்ஸ் மற்றும் உடலுறவின் மூலம் ஏற்படும் நோய்களைத் தடுக்கவும் இயலும். ஆனால் சற்றே விலை அதிகமானது.

ஸ்பெர்மிசைடு

ஸ்பெர்மிசைடு என்பது பெண் உறுப்பில் தடவிக் கொள்ளும் ஒரு ரசாயன பொருளாகும். இது கரு அணுவை செயலிழக்கச் செய்வதால் கருத்தரிப்பைத் தடை செய்ய இயலும். இது மெதுவான நுரை வடிவத்திலும், மாத்திரைகள், கிரீம் வடிவத்தில் உள்ளது. இதன் பக்க விளைவுகள் கூட மிகக் குறைவே. சிலருக்கு இது ஒவ்வாமை விளைவுகளை கொடுக்கலாம்.

நடைமுறையில் உள்ள கருத்தடை முறை

தாய்ப்பால் அளிப்பது

குழந்தை பிறந்த பின் ஒரு சில மாதங்களுக்கு கருமுட்டை வளர்வது, மீண்டும் மாதவிடாய் ஏற்படுவது போன்ற நிகழ்வுகள் ஏற்பட சற்றே தாமதம் ஏற்படும். தாய்ப்பால் அளிக்கும் காலத்தை நீட்டிப்பதன் மூலம் கருத்தரிப்பைத் தள்ளிப் போட இயலும்.

கருத்தடுப்பு சாதனங்கள்

ஐயுடி

ஐயுடி என்பது சிறிய பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டு கர்ப்பப்பையில் பொருத்திக் கொள்ளும் ஒரு கருத்தடை சாதனம் ஆகும். கர்ப்பப்பையில் உள்ள இந்த பொருள் கருத்தரிப்பை தடை செய்து கரு அணுவும் கரு முட்டையும் இணைந்து வளர்வதை தடை செய்கிறது. இந்தியாவில் புழக்கத்தில் உள்ள இந்த கருத்தடை பொருளின் பெயர் காப்பர் டி. இது பொருத்தப்பட்ட இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட வேண்டும். இது மருத்துவர்களின் உதவியுடன் பொருத்திக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. ஆனால் இது மிகச்சிறந்த கருத்தடை சாதனமாக கருதப்படுகிறது.
குறைபாடுகள்
  • இதில் ஒரு சில பக்க விளைவுகள் உள்ளது.
  • பொருத்தப்பட்ட மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை வலி ஏற்படுகிறது.
  • மாதவிடாயின்போது அதிக உதிரப் போக்கு ஏற்பட்டு ரத்தசோகை ஏற்பட வாய்ப்புள்ளது.
  • மிக அரிதாக கர்ப்பப்பையின் உள்சுவர் தோலில் பிரச்சனைகள் ஏற்படலாம். அவ்வாறு ஏற்படும் போது, அதை நீக்கும் நேரத்தில் வலி ஏற்படலாம்.
  • ஐயுடி பொருத்திக் கொள்வதால் கர்ப்பப்பையில் வெளிப்புறத்தில் முக்கியமாக பெல்லோபியன் டியுபில் கரு வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது. இதன் மூலம் சில பாதிப்புகள் ஏற்பட்டு சரியான மருத்துவ வசதி இல்லாத போது உயிருக்கு கூட ஆபத்து ஏற்பட நேரிடலாம்

ஸ்டிராய்டு அல்லாத மாத்திரைகள்

கருத்தடுப்புக்கு சில மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஹார்மோன் முறைகள்

ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் முறையில், ஈஸ்ட்ரோஐன் மற்றும் ப்ரோஜஸ்ட்ரோன் ஹார்மோன்களின் அளவுகள் உடலில் மாற்றப்படுவதால் கரு வளர்ச்சியையும் கரு அணு வளர்ச்சியையும் தடுக்கப்படுகிறது. மேலும் இது சர்விகல் சுவரை அடர்த்தியாக செய்வதால் கரு அணு கர்ப்பபைக்குள் செல்வது தடுக்கப்படுகிறது. ஆனால் இம்முறையில் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்படும் கருத்தடை மருந்துகள்

ஈஸ்ட்ரோஐன் மற்றும் ப்ரோஜஸ்ட்ரோன் கலந்த மாத்திரைகள் எடுத்துக் கொள்வதன் மூலம் ஒவரியில் வளரும் கருமுட்டைகளை வளரவிடாமல் தடுப்பதால் கருத்தரிப்பு ஏற்படாமல் தடுக்க இயலும். மாலா டி குறைந்த வீரியம் உள்ள பாதுகாப்பான கருத்தடை மருந்தாகும்.

ப்ரோஐஸ்ட்ரோன் மட்டும் உள்ள மருந்துகள்

ப்ரோஐஸ்ட்ரோன் மாத்திரை மட்டும் எடுத்துக் கொள்ளும்போது, சர்விகல் ம்யுகஸ் அதிகமாக்கியும், கரு அணு கரு முட்டை நகர்வதை குறைத்தும், கரு வளர்வதை தடுக்கிறது. ஆனால் இம்முறையில் உடல் நலத்தில் பக்க விளைவுகள் உள்ளது.

அவசரக் கால கருத்தடை மாத்திரைகள்

பாதுகாப்பற்ற உடலுறவுக்கு பின் இத்தகைய கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்வதன் மூலம் கருத்தரிப்பைத் தவிர்கலாம். இதன் பக்க விளைவுகளாக, வாந்தி அடுத்த மாதவிடாய் சூழ்நிலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம். மேலும் இந்த முறை 100 % நம்பகமானதல்ல.

நிரந்தரக் கருத்தடை முறைகள்

தம்பதியினர் இனி குழந்தையே வேண்டாம் என்பதில் உறுதியாய் இருக்கின்ற போதே செய்து கொள்ள நிரந்தரக் கருத்தடை முறைகள் பின்பற்றப்படுகின்றன.

பெண்களுக்கான நிரந்தரக் கருத்தடை முறை

பெண்களுக்கு நிரந்தரமாக கருத்தடை செய்து கொள்ளும் முறையில் கரு அணு அல்லது கரு முட்டையை எடுத்துச் செல்லும் குழாயைத் தடுப்பது அல்லது வெட்டி எடுப்பது போன்ற முறைகள் கையாளப்படுகிறது. இம்முறையில் டியூபெக்டமி, லேப்ராஸ்கோபி போன்று பலமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆண்களுக்கான நிரந்தரக் கருத்தடை முறை

வாசக்டமி என்பது ஆண்கள் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படும் சிறிய மாறுதல். இந்த அறுவை சிகிச்சையை செய்வதன் மூலம் கரு அணு செல்வது தடைபடுவதால், பெண்கள் கருத்தரிப்பதை தவிர்க்கலாம். ஆனால் அறுவை சிகிச்கை முடிந்து 48 மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு வாரம் வரையில் அதிக பளுவுள்ள பொருட்களை தூக்கக் கூடாது. அறுவை சிகிச்சைக்கு பின் வீக்கம், வலி, ரத்தப்போக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

இனப்பெருக்கம்


மனித முட்டை மற்றும் விந்துவின் கலப்பு. மனிதனின் இனப்பெருக்கத்தின் முதல் கட்டம்.
பாக்டீரியா திசுப்பிளவு
ஓர் இனத்திலுள்ள் உயிரினங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முறை இனப்பெருக்கம் எனப்படும். இனப்பெருக்கம் என்பது உயிரினங்களின் அடிப்படைப் பண்புகளுள் ஒன்றாகும். தாவரங்கள், நுண்ணுயிர்கள், பூச்சிகள், விலங்குகள், பறவைகள் எனப் பல்வேறு வகையான உயிர்ரினங்கள் இருந்தும், அவைகளின் இனப்பெருக்க நடை வெவ்வேறாகத் தோன்றினாலும், அடிப்படையாக, அவை கலவிமுறை மற்றும் கலவியற்றமுறை என இருவகைப்படும்.

கலவியற்ற இனப்பெருக்கம்:

இருபாலரின் புணரி அணுக்களின் சேர்க்கையின்றி, தனிப்பட்ட முறையில் பெருகும் முறை கலவியற்ற இனப்பெருக்கம்மாகும். பெரும்பாலான ஓர்திசுள் உயிரினங்கள், மற்றும் சில செடிகள் மற்றும் காளான் வகைகள் இவ்வாறாக பெருகுகின்றன.
கலவியற்ற இனப்பெருக்கம் பொதுவாக நான்கு வகைப்படும்
  • மரபணுப் பிளவு
சில உயிரினங்களில், கலவியற்ற இனப்பெருக்கத்தில், ஓர் உயிரிலிருந்து பிறந்த அனத்து உயிர்களுமே, மூல உயிரின் மரபணுக்களைக் கொன்டே பிறக்கும். இவ்வகையில் புதிய மரபுப் பொருட்களின் சேர்க்கை இல்லாததால், இதனை ஒருவகை நகலாக்கம் எனவே கூறலாம். பல பாக்டீரியாக்கள், மரபணுப்பிளவு மூலம் நகல்கள் செய்கின்றன.
  • உயிரணுப் பரிமாற்றம்.
வேறு சில பாக்டீரியக்கள் கிடவை உயிரணு நகைவு மூலம் உயிரணுக்குழுமத்துள் உயிரணுப் பரிமாறம் செய்கின்றன. பல பாக்டீரியாக்களுக்கிடையே உயிரணுப் பரிமாற்றம் நடக்கும் போழ்தும், இவ்வகை பெருக்கம் இருபாலரின் புணரி அணுக்கள் இல்லததனால், கலவியற்ற இனப்பெருக்கமாகவே கருதப்படுகிறது. இங்கு புதியதாகத் தோன்றும் பாக்டீரியாக்கள், பல பாக்டீரியாக்களின் உயிரணுக்களால் ஆனவை, நகல்கள் அல்ல.[1]
  • அரும்புவிடுதல்
சில செடிகள் அரும்புவிட்டு பெருகுகின்றன.
  • கன்னிப்பிறப்பு
பலக்கிய உயிரினங்களில், சிலவகையான மீன்கள், ஊர்வன[2], அரிய சில பறவைகள்[3] போன்றவை Parthenogenesis எனும் வகையான கலவியற்ற இனப்பெருக்கம் செய்கின்றன. ஆண் புணரி அணுக்கள் இல்லாமல் கரு உருவாகும்முறை கன்னிப்பிறப்பு ஆகும். அண்மையில் கொமொடொ டிராகன்கள் கன்னிப்பிறப்பு மூலம் பெறுகக்கூடியவை என்க் கண்டுபிடித்துள்ளனர்[4].

செயற்கை விந்தூட்டல்


செயற்கை விந்தூட்டல் எனப்படுவது பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியினுள், ஆணுடன் ஏற்படும் பாலுறவு நிகழ்வினால் ஏற்படும் இயற்கையான விந்தூட்டல் (natural insemination - NI) முறையாலன்றி, செயற்கையான முறையில் விந்தை உட்செலுத்தும் முறையாகும். இது குழந்தைப் பேற்றிற்காக செய்யப்படும் 'தூண்டிய இனப்பெருக்கத் தொழில்நுட்ப முறை'களில் ஒன்றாகும். பெண்ணின் ஆண் துணையிடமிருந்தோ அல்லது வேறு விந்து வழங்கியான ஒரு ஆணிடமிருந்தோ பெறப்படும் விந்தானது, இங்கே பயன்படுத்தப்படும்.

துவக்கத்தில் சில மருத்துவர்களும், சில ஆராய்ச்சியாளர்களும் ஆழ்மன சக்திகளில் காட்டிய
ஆர்வத்தையும், ஆராய்ச்சிகளையும் பெரும்பாலான விஞ்ஞானிகள் சந்தேகக் கண்ணுடனேயே பார்த்தார்கள். பின் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானிகள் சிலர் காட்டிய அக்கறை அவர்களையும் சிந்திக்க வைததது.
உதாரணத்துக்கு 1912-ல் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் அலெக்சிஸ் காரல் ஆணித்தரமாகத் தன் கருத்தை இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சொன்னார். "கண்களின் உதவியில்லாமல் காண முடிவது, காதுகளின் உதவியில்லாமல் கேட்க முடிவது, ஐம்புலன்களின் உதவியில்லாமல் எண்ணங்களை பரிமாறிக் கொள்வது போன்றவை உண்மையானவையே. உண்மையாக சிந்திக்க முடிந்த எந்த மனிதனும் இது குறித்த தகவல்களை முழுவதும் ஆராயாமல் இந்த உண்மைகளை ஒதுக்கி விட முடியாது".
அவர் கூறியபடி அந்த உண்மைகளை ஒதுக்க முடியாமல் மேலும் ஆராய முற்பட்டவர் ஜோசப் பேங்க்ஸ் ரைன் (1895-1980). அவர் அறிவு தாகம் மிக்கவர். கல்லூரிப்படிப்பு முடிந்ததும் கடற்படையில் சேர்ந்து துப்பாக்கி சுடுவதில் சிறந்து விளங்கியவர். பின் தாவரவியலில் சிகாகோ பல்கலைகழக்த்தில் 1923ல் பிஎச்டி பட்டம் பெற்றவர். பின்பு ஹார்வர்டு பல்கலைகழகத்தில் மனோதத்துவத்திலும் பட்டம் பெற்றவர்.
ஒருமுறை அவரும் அவர் மனைவியும் புகழ்பெற்ற நாவலாசிரியர் ஆர்தர் கானன் டாயில் இறந்தவர்களுடன் கூட தொடர்பு கொள்ள முடியும் என்பதற்கு பல ஆதாரங்கள் விஞ்ஞான பூர்வமாக இருக்கின்றன என்று உதாரணங்களுடன் ஆற்றிய உரையைக் கேட்க நேரிட்டது. இப்படியெல்லாம் நடக்க முடியும் என்கிற எண்ணமே அறிவு தாகம் உள்ள அவர் ஆர்வத்தைக் கிளறி விடவே ஆழ்மன சக்திகள் குறித்து முழுவதுமாக ஆராய்வது என்று அவர் தீர்மானித்தார். அது குறித்து பல நூல்கள் பற்றியும், பரிசோதனைகள் பற்றியும் படித்த அவர் 1930ல் ட்யூக் பல்கலைகழகத்தில் ஆழ்மன சக்திகள் குறித்த விரிவான ஆராய்ச்சிகளைத் தொடங்கினார்.
1931ல் லின்ஸ்மேயர் என்ற பொருளாதார மாணவரை வைத்து அவர் முதலில் தொடங்கிய ஆராய்ச்சி ஜெனர் கார்டுகளை (zener-cards) உபயோகப்படுத்தியதாக இருந்தன. அதில் கிடைத்த முடிவுகள் யூகத்தில் சொல்வதால் வரக்கூடிய விளைவுகளை விட அதிகமானதாக இருந்தன. ஆரம்ப ஆராய்ச்சிகளில் மிகவும் வெற்றிகரமாகக் கிடைத்த முடிவுகள் போகப்
போகக் குறைய ஆரம்பித்தன. காரணங்களை ஆராய்ந்த போது உற்சாகக்குறைவு, கவனச்சிதறல், வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற போட்டியுணர்வு ஆகியவை எல்லாம் காரணங்கள் என்பதை ரைன் கண்டுபிடித்தார்.
(இது இன்றளவும் உண்மையாக உள்ளது. பரபரப்பில்லாத உற்சாகம், முழுக் கவனம், வெற்றியடைந்தே ஆக வேண்டும் என்ற வெறியில்லாமல் அமைதியாக முயல்தல், களைப்பின்மை ஆகியவையே ஆழ்மன சக்திகள் வெற்றிகரமாக வெளிப்பட உதவுகின்றன. பின் ஆழ்மன சக்திகளைப் பெறுவதெப்படி, பயன்படுத்துவதெப்படி என்பதை அலசும் போது இது பற்றி
விரிவாகப் பார்க்கலாம்) லின்ஸ்மேயரை விட்டு விட்டு ரைன் ஹுபர்ட் பியர்ஸ் என்பவரை வைத்து 1932ல் தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். அந்த கார்டுகளில் சிலவற்றை எடுத்து மறைத்து வைத்துக் கொள்ள அந்தக் கார்டுகளைச் சரியாக யூகித்துச் சொல்லும் அந்தப்
பரிசோதனைகளில் வியக்கத் தக்க சதவீத வெற்றிகள் கிடைத்தன. சில ஆராய்ச்சிகள் கார்டுகள் வைத்திருப்பவருக்கும், யூகிப்பவருக்கும் இடையே நிறைய இடைவெளியில் நடத்தப்பட்டன என்றாலும் அந்த விளைவுகளில் அது அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
எடுத்த கார்டுகளை யூகிப்பது போலவே எடுக்கப் போகும் கார்டுகளையும் யூகிக்கும் ஆராய்ச்சிகளையும் ரைன் மேற்கொண்டார். ஜெனர் கார்டுகளைப் போலவே பகடைக் காய்களும் ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டன. கையால்உருட்டிப் போடுவது, ஒரு கப்பில் வைத்து வீசுவது, எந்திரம் மூலமாக எறியப்படுவது போன்ற பரிசோதனைகளும் நிகழ்த்தப்பட்டன. எந்த எண் வரக்கூடும் என்ற யூகங்களையும் ஆராய்ச்சி செய்து சரிபார்த்தனர். அப்படிக் கிடைத்த முடிவுகளும் ஆழ்மன சக்திகளை உறுதிப்படுத்தும் அளவுக்கு உயர்ந்த சதவீதமாகவே இருந்தன.
1934ல் ரைன் தன் ஆராய்ச்சிகளைப் புத்தகமாக (Extra Sensory Perception) வெளியிட்டார். அது பல பதிப்புகளைக் கண்டு வெற்றிவாகை சூடியது. ரைன் மேலும் பல நபர்களை வைத்து தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். 1960களில் ஆழ்மன ஆராய்ச்சிகளுக்காக Foundation for Research on the Nature of Man என்ற அமைப்பை அவர் ஏற்படுத்தினார். பின்னர் அது மாற்றம் அடைந்து ரைன் ஆராய்ச்சி மையம் (Rhine Research Center) என்ற பெயரில் இன்றும் ஆராய்ச்சிகளை நடத்தியும், மற்றவர்களின் ஆராய்ச்சிகளுக்கு உதவியும் வருகிறது.
முறைப்படியான ஆழ்மன ஆராய்ச்சிகளுக்கு ஜே.பி.ரைன் எடுத்த முயற்சிகள் இன்னொரு மைல்கல் என்றால் அது மிகையாகாது. 1930 முதல் தன் மரண காலம் வரை கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் அந்த ஆராய்ச்சிகளில் சளைக்காமல் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவரது முயற்சிகள் தற்கால அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாக அமைந்தன. பின்னால் வந்த பல ஆராய்ச்சியாளர்கள் அவருடைய அடிப்படைகளையே ஒரு அளவுகோலாக வைத்துக் கொள்ளும் அளவு இந்தத் துறைக்கு பெரும்சேவை புரிந்துள்ளார்.
அவர் மனிதர்களிடம் மட்டுமல்லாமல் விலங்குகளிடமும் இது போன்ற அதீத சக்திகள் இருப்பதாகக் கருதினார். சிலர் அதிகமாக அதை வெளிப்படுத்த முடிந்தவர்களாக இருப்பதாகவும், அதுவும் சில குறிப்பிட்ட சமயங்களில் அந்த சக்திகள் அதிகமாக வெளிப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
"விளக்க முடியாத மகாசக்திகளைக் காணும் போது உற்சாகமாக அதைப் பற்றிக் கொண்டு ஆராய முற்படுகிற ஆராய்ச்சியாளன் அதில் ஒரு பெரிய பொக்கிஷத்தையே கண்டுபிடிக்கிறான். அது எந்த அளவு மர்மமானதாகவும் விளக்க முடியாததாகவும் உள்ளதோ அந்த அளவு உயர்ந்த ஞானத்தை அது விளங்கப்பெறும் போது தருவதாக இருக்கிறது," என்று 1947ல் ரைன் கூறியது போல பல ஆராய்ச்சியாளர்கள் ஆழ்மன சக்தியை ஆராய்ந்து மலைத்துப் போனார்கள்.
எத்தனை தான் ஆதாரங்களுடன் சொன்னாலும் ஆழ்மன சக்திகள் ஆர்வத்தைத் தூண்டும் அதே அளவுக்கு "உண்மையில் இப்படி இருக்க முடியுமா?" என்ற சந்தேகத்தையும் படிப்பவர் மனதிலும் கேள்விப்படுபவர் மனதிலும் ஏற்படுத்துவது இயல்பே. எனவே ஆராய்ச்சிகள் மேலும் அதிகமாகவும் ஆழமாகவும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் பூமியில் மட்டுமல்ல விண்வெளியிலும் இந்த ஆராய்ச்சி நடந்திருக்கிறது என்றால் நம்பக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அது உண்மை. அதன் விவரங்களைக் காண்போமா?
மேலும் பயணிப்போம்...
நன்றி: விகடன்
துவக்கத்தில் சில மருத்துவர்களும், சில ஆராய்ச்சியாளர்களும் ஆழ்மன சக்திகளில் காட்டிய
ஆர்வத்தையும், ஆராய்ச்சிகளையும் பெரும்பாலான விஞ்ஞானிகள் சந்தேகக் கண்ணுடனேயே பார்த்தார்கள். பின் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானிகள் சிலர் காட்டிய அக்கறை அவர்களையும் சிந்திக்க வைததது.
உதாரணத்துக்கு 1912-ல் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் அலெக்சிஸ் காரல் ஆணித்தரமாகத் தன் கருத்தை இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சொன்னார். "கண்களின் உதவியில்லாமல் காண முடிவது, காதுகளின் உதவியில்லாமல் கேட்க முடிவது, ஐம்புலன்களின் உதவியில்லாமல் எண்ணங்களை பரிமாறிக் கொள்வது போன்றவை உண்மையானவையே. உண்மையாக சிந்திக்க முடிந்த எந்த மனிதனும் இது குறித்த தகவல்களை முழுவதும் ஆராயாமல் இந்த உண்மைகளை ஒதுக்கி விட முடியாது".
அவர் கூறியபடி அந்த உண்மைகளை ஒதுக்க முடியாமல் மேலும் ஆராய முற்பட்டவர் ஜோசப் பேங்க்ஸ் ரைன் (1895-1980). அவர் அறிவு தாகம் மிக்கவர். கல்லூரிப்படிப்பு முடிந்ததும் கடற்படையில் சேர்ந்து துப்பாக்கி சுடுவதில் சிறந்து விளங்கியவர். பின் தாவரவியலில் சிகாகோ பல்கலைகழக்த்தில் 1923ல் பிஎச்டி பட்டம் பெற்றவர். பின்பு ஹார்வர்டு பல்கலைகழகத்தில் மனோதத்துவத்திலும் பட்டம் பெற்றவர்.
ஒருமுறை அவரும் அவர் மனைவியும் புகழ்பெற்ற நாவலாசிரியர் ஆர்தர் கானன் டாயில் இறந்தவர்களுடன் கூட தொடர்பு கொள்ள முடியும் என்பதற்கு பல ஆதாரங்கள் விஞ்ஞான பூர்வமாக இருக்கின்றன என்று உதாரணங்களுடன் ஆற்றிய உரையைக் கேட்க நேரிட்டது. இப்படியெல்லாம் நடக்க முடியும் என்கிற எண்ணமே அறிவு தாகம் உள்ள அவர் ஆர்வத்தைக் கிளறி விடவே ஆழ்மன சக்திகள் குறித்து முழுவதுமாக ஆராய்வது என்று அவர் தீர்மானித்தார். அது குறித்து பல நூல்கள் பற்றியும், பரிசோதனைகள் பற்றியும் படித்த அவர் 1930ல் ட்யூக் பல்கலைகழகத்தில் ஆழ்மன சக்திகள் குறித்த விரிவான ஆராய்ச்சிகளைத் தொடங்கினார்.
1931ல் லின்ஸ்மேயர் என்ற பொருளாதார மாணவரை வைத்து அவர் முதலில் தொடங்கிய ஆராய்ச்சி ஜெனர் கார்டுகளை (zener-cards) உபயோகப்படுத்தியதாக இருந்தன. அதில் கிடைத்த முடிவுகள் யூகத்தில் சொல்வதால் வரக்கூடிய விளைவுகளை விட அதிகமானதாக இருந்தன. ஆரம்ப ஆராய்ச்சிகளில் மிகவும் வெற்றிகரமாகக் கிடைத்த முடிவுகள் போகப்
போகக் குறைய ஆரம்பித்தன. காரணங்களை ஆராய்ந்த போது உற்சாகக்குறைவு, கவனச்சிதறல், வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற போட்டியுணர்வு ஆகியவை எல்லாம் காரணங்கள் என்பதை ரைன் கண்டுபிடித்தார்.
(இது இன்றளவும் உண்மையாக உள்ளது. பரபரப்பில்லாத உற்சாகம், முழுக் கவனம், வெற்றியடைந்தே ஆக வேண்டும் என்ற வெறியில்லாமல் அமைதியாக முயல்தல், களைப்பின்மை ஆகியவையே ஆழ்மன சக்திகள் வெற்றிகரமாக வெளிப்பட உதவுகின்றன. பின் ஆழ்மன சக்திகளைப் பெறுவதெப்படி, பயன்படுத்துவதெப்படி என்பதை அலசும் போது இது பற்றி
விரிவாகப் பார்க்கலாம்) லின்ஸ்மேயரை விட்டு விட்டு ரைன் ஹுபர்ட் பியர்ஸ் என்பவரை வைத்து 1932ல் தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். அந்த கார்டுகளில் சிலவற்றை எடுத்து மறைத்து வைத்துக் கொள்ள அந்தக் கார்டுகளைச் சரியாக யூகித்துச் சொல்லும் அந்தப்
பரிசோதனைகளில் வியக்கத் தக்க சதவீத வெற்றிகள் கிடைத்தன. சில ஆராய்ச்சிகள் கார்டுகள் வைத்திருப்பவருக்கும், யூகிப்பவருக்கும் இடையே நிறைய இடைவெளியில் நடத்தப்பட்டன என்றாலும் அந்த விளைவுகளில் அது அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
எடுத்த கார்டுகளை யூகிப்பது போலவே எடுக்கப் போகும் கார்டுகளையும் யூகிக்கும் ஆராய்ச்சிகளையும் ரைன் மேற்கொண்டார். ஜெனர் கார்டுகளைப் போலவே பகடைக் காய்களும் ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டன. கையால்உருட்டிப் போடுவது, ஒரு கப்பில் வைத்து வீசுவது, எந்திரம் மூலமாக எறியப்படுவது போன்ற பரிசோதனைகளும் நிகழ்த்தப்பட்டன. எந்த எண் வரக்கூடும் என்ற யூகங்களையும் ஆராய்ச்சி செய்து சரிபார்த்தனர். அப்படிக் கிடைத்த முடிவுகளும் ஆழ்மன சக்திகளை உறுதிப்படுத்தும் அளவுக்கு உயர்ந்த சதவீதமாகவே இருந்தன.
1934ல் ரைன் தன் ஆராய்ச்சிகளைப் புத்தகமாக (Extra Sensory Perception) வெளியிட்டார். அது பல பதிப்புகளைக் கண்டு வெற்றிவாகை சூடியது. ரைன் மேலும் பல நபர்களை வைத்து தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். 1960களில் ஆழ்மன ஆராய்ச்சிகளுக்காக Foundation for Research on the Nature of Man என்ற அமைப்பை அவர் ஏற்படுத்தினார். பின்னர் அது மாற்றம் அடைந்து ரைன் ஆராய்ச்சி மையம் (Rhine Research Center) என்ற பெயரில் இன்றும் ஆராய்ச்சிகளை நடத்தியும், மற்றவர்களின் ஆராய்ச்சிகளுக்கு உதவியும் வருகிறது.
முறைப்படியான ஆழ்மன ஆராய்ச்சிகளுக்கு ஜே.பி.ரைன் எடுத்த முயற்சிகள் இன்னொரு மைல்கல் என்றால் அது மிகையாகாது. 1930 முதல் தன் மரண காலம் வரை கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் அந்த ஆராய்ச்சிகளில் சளைக்காமல் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவரது முயற்சிகள் தற்கால அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாக அமைந்தன. பின்னால் வந்த பல ஆராய்ச்சியாளர்கள் அவருடைய அடிப்படைகளையே ஒரு அளவுகோலாக வைத்துக் கொள்ளும் அளவு இந்தத் துறைக்கு பெரும்சேவை புரிந்துள்ளார்.
அவர் மனிதர்களிடம் மட்டுமல்லாமல் விலங்குகளிடமும் இது போன்ற அதீத சக்திகள் இருப்பதாகக் கருதினார். சிலர் அதிகமாக அதை வெளிப்படுத்த முடிந்தவர்களாக இருப்பதாகவும், அதுவும் சில குறிப்பிட்ட சமயங்களில் அந்த சக்திகள் அதிகமாக வெளிப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
"விளக்க முடியாத மகாசக்திகளைக் காணும் போது உற்சாகமாக அதைப் பற்றிக் கொண்டு ஆராய முற்படுகிற ஆராய்ச்சியாளன் அதில் ஒரு பெரிய பொக்கிஷத்தையே கண்டுபிடிக்கிறான். அது எந்த அளவு மர்மமானதாகவும் விளக்க முடியாததாகவும் உள்ளதோ அந்த அளவு உயர்ந்த ஞானத்தை அது விளங்கப்பெறும் போது தருவதாக இருக்கிறது," என்று 1947ல் ரைன் கூறியது போல பல ஆராய்ச்சியாளர்கள் ஆழ்மன சக்தியை ஆராய்ந்து மலைத்துப் போனார்கள்.
எத்தனை தான் ஆதாரங்களுடன் சொன்னாலும் ஆழ்மன சக்திகள் ஆர்வத்தைத் தூண்டும் அதே அளவுக்கு "உண்மையில் இப்படி இருக்க முடியுமா?" என்ற சந்தேகத்தையும் படிப்பவர் மனதிலும் கேள்விப்படுபவர் மனதிலும் ஏற்படுத்துவது இயல்பே. எனவே ஆராய்ச்சிகள் மேலும் அதிகமாகவும் ஆழமாகவும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் பூமியில் மட்டுமல்ல விண்வெளியிலும் இந்த ஆராய்ச்சி நடந்திருக்கிறது என்றால் நம்பக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அது உண்மை. அதன் விவரங்களைக் காண்போமா?
மேலும் பயணிப்போம்...
நன்றி: விகடன்

மொகெஞ்சதாரோ


மெகெஞ்சதாரோவில் தொல்லியல் அழிபாடுகள்*
யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்

கராச்சி, தேசிய தொல்பொருட் காட்சி நிலையத்தில் கிமு 2500 ஆண்டு பழமையான சிலை.
நாடு பாக்கித்தானின் கொடி பாக்கிஸ்தான்
வகை பண்பாடு
ஒப்பளவு ii, iii
மேற்கோள் 138
பகுதி ஆசியா-பசிபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 1980  (4வது அமர்வு)
* பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி.
பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி.
சிந்துவெளியில் மொஹெஞ்சதாரோ அமைவிடம்.
மொகெஞ்சதாரோ (Mohenjo-daro, மொஹெஞ்சதாரோ) என்பது சிந்துவெளிப் பண்பாட்டுப் பகுதியில் அமைந்திருந்த முக்கிய நகரங்களுள் ஒன்று. ஏறத்தாழ கிமு 26 ஆம் நூற்றாண்டளவில் உருவாகியிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்ற இது இன்றைய பாகிஸ்தானின் சிந்துப் பகுதியில் உள்ள சுக்கூர் என்ற ஊருக்கு தென்மேற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சிந்துவெளியில் அமைந்திருந்த நகரங்களில் மிகவும் பெரியது எனப்படும் இந் நகரம், அக்காலத்தில் தெற்காசியாவின் முக்கியமான நகரமாகவும் விளங்கியது.
இது சிந்துவெளியின் இன்னொரு முக்கிய நகரமான ஹரப்பாவை விட நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இது ஹரப்பாவில் இருந்து 400 மைல் தொலைவில் உள்ள இந் நகரம் கி.மு. 1700-இல் சிந்துநதியின் தடம் மாறியதால் அழிந்திருக்கலாம் எனச் சிலர் நம்புகிறார்கள். மொஹெஞ்சதாரோவின் அழிபாடுகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் முதன் முதலில் 1920களில் கண்டறியப்பட்டது. எனினும் ஆழமான ஆய்வு முயற்சிகள் 1960 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னரே நடைபெற்று வருகின்றன.
மொகெஞ்சதாரோவில் அகழ்ந்து எடுக்கப்பட்ட கட்டிடப்பகுதி
இது யுனெஸ்கோவின் உலகப் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இடம்பெற்று வருகின்ற அண்மைக் காலத்திய விரிவான நடவடிக்கைகள், பாகிஸ்தானின் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் திணைக்களத்தினதும், பிற ஆலோசகர்களினதும் உதவியுடன் யுனெஸ்கோ மேற்கொண்டுவரும் காப்பாண்மை (conservation) நடவடிக்கைகளை மையப்படுத்தியுள்ளது.

இப்பகுதியில் ஏறத்தாழ 500 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டிருந்த காப்பு வேலைகள், நிதிப் பற்றாக்குறையினால், 1997 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. எனினும் ஏப்ரல் 1997 ஆம் ஆண்டில், யுனெஸ்கோவின் ஆதரவில், மொஹெஞ்சதாரோ அழிபாடுகளை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பதற்கான திட்டம் ஒன்று தொடங்கப்பட்டது. இரண்டு பத்தாண்டுகளில் நிறைவேற்றப்பட இருக்கும் இந்தத் திட்டத்திற்காக யுனெஸ்கோ நிறுவனம் பத்து மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது.

வரலாறு

மொஹெஞ்சதாரோ கி.மு 2600 அளவில் உருவாகி கி.மு. 1700 அளவில் அழிந்துபோனதாகச் சொல்லப்படுகின்றது. சர் ஜோன் மார்ஷல் என்பவர் தலைமையிலான தொல்லியலாளர்கள் இதனை 1920 இல் கண்டுபிடித்தனர். இவர் நினைவாக இவர் பயன்படுத்திய மோட்டார் வண்டி இன்றும் மொஹெஞ்சதாரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1945 ஆம் ஆண்டில், அஹ்மத் ஹசன் தானி (Ahmad Hasan Dani) என்பவரும் மோர்ட்டிமர் வீலர் (Mortimer Wheeler) என்பவரும் மேலும் அகழ்வாவுகளை இப்பகுதியில் நடத்தினர்.

லோத்தல்

இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் (Archaeological Survey of India) கருத்துப்படியான பண்டைக்கால லோத்தலின் தோற்றம்.
லோத்தல் சிந்துவெளி நாகரிகக் கால நகரங்களில் ஒன்றாகும். இதன் அழிபாடுகள் தற்கால இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ளது. இதன் தோற்றத்தின் காலம் கி.மு 2400 எனக் கணிக்கப்பட்டுள்ளது. இக் காலத்தைச் சேர்ந்த, இந்தியாவிலுள்ள முக்கியமான தொல்லியல் களமாக இது கருதப்படுகின்றது. 1954 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இவ்விடத்தில், 1955 ஆம் ஆண்டு பெப்ரவரி 13 ஆம் நாள் தொடங்கி 1960 ஆம் ஆண்டு மே 19 வரை அகழ்வாய்வுகள், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தினால் நடத்தப்பட்டது.

மெஹெர்கர்

CiviltàValleIndoMappa.png
மெஹெர்கர், இன்றைய பாகிஸ்தானிலுள்ள, பண்டைக்காலக் குடியேற்றப் பகுதி ஆகும். இப் பிரதேசத்தின் புதிய கற்காலக் குடியேற்றங்கள் பற்றிய தொல்லியல் ஆய்வுகளுக்கு மிக முக்கியமான களங்களில் இதுவும் ஒன்று. இக்குடியேற்றத்தின் எச்சங்கள் பாகிஸ்தானின் பலூச்சிஸ்தான் பகுதியில் காணப்படுகின்றன. இது போலான் கணவாய்க்கு அருகிலுள்ள கச்சிச் சமவெளிப் பகுதியில், சிந்துநதிப் பள்ளத்தாக்குக்கு மேற்கே, குவேட்டா (Quetta), காலத் (Kalat), சிபி (Sibi) ஆகிய நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது.
பிரான்சைச் சேர்ந்த தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இக் களம், உலகின் பழமையான மனித குடியேற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதன் ஆதிக் குடியேற்ற வாசிகள், பலூச்சிக் குகைவாழ்நரும், மீனவர்களும் ஆவர். 1974 இல் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளை (ஜர்ரிகேயும் (Jarrige) மற்றவர்களும்) அடிப்படையாகக் கொண்டு, இப்பகுதியே தென்னாசியாவின் அறியப்பட்ட வேளாண்மைக் குடியேற்றங்களில் முற்பட்டதாகக் கருதப்படுகின்றது. இங்குள்ள குடியேற்றத்துக்கான மிக முற்பட்ட தடயங்கள் கி.மு. 7000 ஐச் சேர்ந்தவை. தென்னாசியாவின் முற்பட்ட மட்பாண்டச் சான்றுகளும் இங்கேயே கிடைத்துள்ளன.
மெஹெர்கரின் செப்புக்கால மக்கள், வடக்கு ஆப்கானிஸ்தான், வடகிழக்கு ஈரான் மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளுடனும் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாகத் தெரிகிறது.

அரப்பா

சிந்துவெளியில் ஹரப்பாவின் அமைவிடம்.
அரப்பா (Harappa, ஹரப்பா) என்பது, சிந்து வெளி பகுதியில் அமைந்திருந்த பண்டைய நகரங்களில் ஒன்று. இன்றைய பாகிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் பஞ்சாப் மாகாணத்தில், சகிவாலுக்கு 35 கிலோமீட்டர் தொலைவில் இதன் அழிபாடுகள் உள்ளன. புதிய நகரம், ரவி ஆற்றின் பழைய பாதைக்கு அண்மையில் அமைந்துள்ளது. அரண் செய்யப்பட்டிருந்த பண்டைய நகர அழிபாடுகளும் இதன் அருகிலேயே காணப்படுகின்றன. கிமு 3300 இலிருந்து கிமு 1600 வரை இருந்திருக்கலாம் எனக் கருதப்படும் இந் நகரம் 40,000 வரையான மக்கள்தொகையைக் கொண்டதாக இருந்திருக்கலாம் எனவும் கணிக்கப்படுகின்றது. இது அக்கால அளவுகளின் படி அதிகமானதாகும். ஹரப்பாப் பண்பாடு இன்றைய பாகிஸ்தானின் எல்லைகளுக்கும் அப்பால் பரந்திருந்தபோதும், இதன் மையப்பகுதிகள் சிந்து மற்றும் பஞ்சாப் பகுதிகளிலேயே இருந்தன.